Namakkal

News December 13, 2024

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – சுப்பிரமணியன் (9498173585), திருச்செங்கோடு – திவ்யா (8973353394), வேலூர் – கங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 13, 2024

தேசிய அளவிலான ஆராய்ச்சி போட்டி: நாமக்கல் மாணவர் வெற்றி

image

எக்செல் பார்மசி கல்லூரியில் இறுதியாண்டு பி.பார்ம் மாணவர் திலீப்குமார், இந்திய பார்மசி பட்டதாரி சங்கம் 36வது ஆண்டு விழாவில் நடத்திய மதிப்புமிக்க இ-போஸ்டர் போட்டியில் 3ம் பரிசு பெற்றார். இந்த நிகழ்வு கேரளாவின் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. இந்த தேசிய அளவிலான ஆராய்ச்சிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு கல்லூரி சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

News December 13, 2024

நாமக்கல்லில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், புதிய குடும்ப அட்டை கோருதல், கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாா்களை தெரிவிக்க குறைதீா் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் மற்றும் குமாரபாளையம், வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

News December 13, 2024

தனிநபர் வீட்டு நூலகங்களுக்கு பரிசு 

image

தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தை தேர்ந்தெடுத்து விருது மற்றும் சான்றிதழ் ஆகியன நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் புத்தக திருவிழாவின்போது வழங்கப்பட உள்ளது. வீட்டில் நூலகம் வைத்து பராமரிப்பவர்கள், 31.12.2024 க்குள் dlonkoffice@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் மாவட்ட நூலக அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News December 13, 2024

சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் அதிகாலை நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேய பகவான் மஞ்சள் நிற ஆடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் மகா தீபம் நடைபெற உள்ளது.

News December 13, 2024

BREAKING நாமக்கல்லில் விபத்து: 2 பேர் பலி!

image

நாமக்கல் அருகே அமைந்துள்ள செல்லப்பம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சேலத்திலிருந்து நாமக்கல் நோக்கி வந்துகொண்டிருந்த லாரியும் – நாமக்கல்லிலிருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த பிக்கப் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பிக்கப் வேன் ஓட்டிய ஓட்டுநரும், அவருடன் இருந்த மற்றவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 13, 2024

நாமக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 12, 2024

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 12ஆம் தேதி நடைபெற்றது இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.90ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது தொடர் மழை குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் கடந்த சில தினங்களாக முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.90 ஆகவே நீடிக்கிறது.

News December 12, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.காளான் உற்பத்தி நிறுவனத்தில் ஆட்சியர் ஆய்வு
2.பேளுக்குறிச்சியில் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு
3.நாமக்கல் காவல்துறை விடுத்த மழைக்கால எச்சரிக்கை
4.நாமக்கல்லில் அகல் விளக்கு விற்பனை படுஜோர்
5.நாமக்கல் ஆஞ்சநேயர் வெண்ணை காப்பு அலங்காரம் ரத்து

News December 12, 2024

நாமக்கல்லில் இன்று இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு விருந்து பணிக்காக எஸ் பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம் நாமக்கல் – யுவராஜ் (94981 77823), ராசிபுரம் குணசீலன் (94981 20852), திருச்செங்கோடு -மலர்விழி (9498109579), வேலூர்- சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!