Namakkal

News December 15, 2024

நாமக்கல்: பூண்டு கிலோ ரூ.500-க்கு விற்பனை

image

நாமக்கல்லில் பூண்டு விலை திடீரென உயர்ந்து ஒரு கிலோ ரூ.500-க்கு விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ பூண்டு ரூ.380-க்கு விற்பனையானது. ஆனால் சில்லரை விற்பனை கடைகளில் முதல்ரக பூண்டு கிலோ ரூ.480 முதல் ரூ.500 வரை விற்கப்பட்டது. 2வது ரக பூண்டு கிலோ ரூ.425 முதல் ரூ.450 வரை விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

News December 15, 2024

கறிக்கோழி கிலோவுக்கு ரூ.6 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.6 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.86 ஆக அதிகரித்துள்ளது. முட்டை விலை 590 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.105 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News December 14, 2024

நாமக்கல்: இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு ➤ ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதியில் ஆட்சியர் ஆய்வு ➤ நாமக்கல் மாவட்டத்தில் 144.50 மிமீ மழை பதிவு ➤ தார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய எம்பி ➤ மகளிர்க்கான விடியல் பயண பேருந்து தொடக்க விழா ➤ திமுக அலுவலகத்தில் பொதுக்கூட்டம் ➤ சேந்தமங்கலத்தில் அரசு ஐடிஐ திறக்கப்படும் எம்.பி. தெரிவிப்பு ➤ சிறப்பு அலங்காரத்தில் தத்தகிரி முருகன்

News December 14, 2024

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9894167158), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – ரங்கசாமி (9487539119), வேலூர் – சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 14, 2024

கபீர் புரஷ்கார் விருது ஆட்சியர் தகவல்

image

சமுதாய, வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ள விருதிற்கு தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் https://awardstn.gov.in இணையதளத்தில் மட்டுமே 15.12.2024 அதற்குள் அனுப்ப வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News December 14, 2024

மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

image

நாமக்கல் மெட்ரோ அரிமா சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், இணைத்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் மூட்டு எலும்பு பரிசோதனை முகாம் நாளை,காலை முதல் 1.00 மணி வரை பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துத்திக்குளம் தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 14, 2024

கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் இனி வரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் பல இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. பகல் வெப்பம் 78.8-க்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8-க்கு மிகாமலும் இருக்கக் கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News December 14, 2024

நாமக்கல்லில் இலவச மீன் வளர்ப்பு பயிற்சி

image

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு நெய்கெளுத்தி மீன்வளர்ப்பு ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் 04286 266345, 266650 735855484 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம் என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

News December 14, 2024

ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொது மாவட்ட வினியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், திருத்தம் புதிய ரேஷன் அட்டை கோருதல், மொபைல் எண் உள்ளிட்ட ரேஷன் அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் குறைதீர் முகாம் இன்று நடக்கிறது. நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலூர், குமாரபாளையம் ஆகிய வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடக்கிறது.

News December 13, 2024

நாமக்கல் தலைப்புச் செய்திகள்

image

1.நாமக்கல் மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருநாள் அனைத்து கோயில்களில் நடைபெற்றது.
2.காவிரி ஆற்றில் நீர்வரத்து குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு
3.தேசிய அளவிலான ஆராய்ச்சி போட்டி: நாமக்கல் மாணவர் வெற்றி
4.புதுப்பட்டி மேல் ஏரிக்கு அதிகரித்த நீர் வரத்து
5.செம்மேட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை

error: Content is protected !!