India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடி மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் பொன்னு வேலப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தைப்பேட்டை புதூரில் 35 ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வந்த அவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வழக்கில் தொடர்புடைய அவரது மனைவி வசந்தி, மகன் சரவணன், மகள் உமா உள்ளிட்டோரை தேடி வருகிறது.
நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் அலுவலகத்தில் கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகம் திறப்பு விழா 6/1/2025 காலை 9:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் ஊராட்சி மற்றும் வார்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தெரிவித்துள்ளார்.
இராசிபுரம் அடுத்துள்ள பிள்ளாநல்லூர் பேரூராட்சி, குருசாமிபாளையத்தில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முழு நேர நியாய விலைக்கடை கட்டடத்தை திறந்து வைத்தார் ராஜேஸ்குமார். பின்னர் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் புகார்கள் இருப்பின் 04286-281116 என்ற பொதுவான எண்ணை பயன்படுத்தலாம். நாமக்கல் 9445000233, இராசிபுரம் 9445000234, சேந்தமங்கலம் 9445796437, மோகனூர் 9499937026, கொல்லிமலை 9499937026, திருச்செங்கோடு 9445796436, பரமத்திவேலூர் 9445000235, குமாரபாளையம் 9445000236 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
2025ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களில் ஒன்றான, கரும்பு கொள்முதல் தொடர்பாக, இடைத் தரகர்களையோ, இதர நபர்களையோ நம்ப வேண்டாம் என ஆட்சியர் உமா விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கலில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க மாதேஸ்வரன் எம்பி கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று நாமக்கல்லில் நின்றுசெல்ல நடவடிக்கை மேற்கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷணவை சந்தித்து நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் 5,39,303 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், 730 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் என மொத்தம் 5,40,033 குடும்பங்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனை மக்கள் பெறுவதற்கு ஏதுவாக ஜன.3 முதல் 8ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று டோக்கன் வழங்கிவருகின்றனர். உங்களுக்கு டோக்கன் கிடைத்ததா?
2025-ம் ஆண்டு பொங்கலுக்கு பச்சரிசி, சக்கரை, கரும்பு என நாமக்கல் மாவட்டத்தில் 5,39,303 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 730 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், ஆக மொத்தம் 5,40,033 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ் பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம் நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் சுகவானம் (94981 74815), திருச்செங்கோடு -முருகேசன் (9498133890), வேலூர்- சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 ஆகவே நீடிக்கிறது.
Sorry, no posts matched your criteria.