India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024-2025ஆம் ஆண்டிற்கான திருநங்கை விருது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ல் வழங்கப்பட உள்ளது.நாமக்கல் மாவட்டத்தைச்சார்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.விருதுக்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே வரவேற்கப்படுகிறது.கடைசி நாள் 10.02.2025.விதிமுறை; அரசின் உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும்,நலவாரியத்தில் உறுப்பினராக இருக்ககூடாது.
நாளை 07-01-2025 காலை 10.00 மணியளவில் திமுக தலைமை கழகப் அறிவிப்பிற்கு இணங்க தமிழ்நாட்டின் தமிழ் தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்து நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள BSNL தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .இதில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் கொல்லிமலை ஒன்றிய கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (06/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9894167158), ராசிபுரம் – கோமலவள்ளி (7548826260), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – ராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் ஒரு வாகனத்திற்கு பத்து ரூபாய் விதம் வசூல் செய்யப்பட்டது. கடந்த ஐந்து நாட்களாக திடீரென கட்டணம் அதிகப்படுத்தியது. ஆனால் அந்த கட்டண ரசீதில் எந்தவித கட்டணம் இல்லாததால் பொதுமக்கள் அதிர்ச்சி வாகனம் நிறுத்த ரூ15 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முட்டை விலை உயர்த்த வேண்டும் என கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர். மற்ற மண்டலத்திலும் மார்கழி மாதம் நடைபெறும் காரணத்தால் முட்டை நுகர்வோர் குறைவாக இருக்கும் காரணத்தால் முட்டை விலை சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு முட்டை 4.80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மொத்தம் 435 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி டாக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊசி மூலம் மருந்து செலுத்தி டாக்டர் சந்தான கோபாலன் தற்கொலை செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக எந்த தகவலுக்கும் தெரியவில்லை. அவரின் உடலை மீட்டு, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார் இன்று 6ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை முன்னிட்டு நடத்தப்பட்ட அண்ணா மிதிவண்டி போட்டி மற்றும் அண்ணா மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுத்தொகை பாராட்டு சான்று வழங்கப்பட்டது. இதில் ஆட்சியர் உமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலகபிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் மார்கழி திங்கள்கிழமையை முன்னிட்டு இன்று காலை 10.30மணிக்கு பஞ்சாமிருதம் பால் தயிர் மஞ்சள் சந்தனம் சொர்ணம் என அபிஷேக ம் பின்அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சியளித்தார் பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ச.உமா நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று காலை 9.30 மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெளியிடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.