Namakkal

News January 29, 2025

நாமக்கல் மாவட்டத்திற்கு விருது 

image

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு பொது விநியோகத் திட்டம் தொடர்பான பணிகளில், நாமக்கல் மாவட்டத்திற்கு 2022-23 ஆம் ஆண்டில் மூன்றாவது பரிசும் 2023-24 ஆம் ஆண்டில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிறுதானிய உணவு திருவிழாவில் அமைச்சர்கள் பெரியசாமி, பெரியகருப்பன், சக்கரபாணி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் உமா அவர்களிடம் விருஹடினை வழங்கினர்.

News January 29, 2025

கோழிகளுக்கு இலவச நோய் தடுப்பூசி முகாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பிப்ரவரி 1ந் தேதி முதல் 14ந் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி முகாம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. கால்நடை மருந்தகங்களில் நடைபெறும் முகாம்களில் தங்களது கோழிகளுக்கு இலவசமாக கோழி நோய் தடுப்பூசி மருந்தினை செலுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மருத்துவர் இன்று உமா தெரிவித்துள்ளார்.

News January 29, 2025

நாமக்கல்லில் வரும் 1-ந் தேதி புத்தகத் திருவிழா துவக்கம்

image

நாமக்கல் நகரில் பரமத்தி வேலூர் சாலையில் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் வருகின்ற பிப்ரவரி 01-2-2025 சனிக்கிழமை முதல் பிப்ரவரி 10ஆம் தேதி திங்கட்கிழமை வரை மாபெரும் புத்தக திருவிழா 2025 விழா 10 நாட்கள் இங்கு நடைபெற உள்ளது இந்த புத்தகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்கு விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள

News January 29, 2025

அரசு பள்ளி ஆசிரியர் மீது புகார் போலீசார் விசாரணை

image

பள்ளிப்பாளையம் ஒன்றியத்தில் அமைந்துள்ள வீரப்பம்பாளையம் அரசு பள்ளி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர் நந்தகுமார் என்பவர் மாணவிகளை கைகால்களை அமுக்க சொல்வதாகவும் பாலியல் ரீதியான அத்துமீறி ஈடுபடுவதாகவும், புகார் எழுந்து நிலையில் நேற்று மாலை குமாரபாளையம் போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகள் அரசு பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

News January 29, 2025

நாமக்கல் உழவர் சந்தை இன்றைய காய்கள் விலை நிலவரம்

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய (29 -01.2025) காய்கறிகள் விலை நிலவரம்: (கிலோ 1-க்கு) கத்தரி ரூ.35-40 – 44 தக்காளி – ரூ.24 – 26, வெண்டைக்காய் ரூ.56, அவரைக்காய் – ரூ 55 – 60 – 65கொத்தவரை ரூ.64 முருங்கை ரூ.120, முள்ளங்கி ரூ.20, புடலங்காய் ரூ.45-50பாகற்காய் ரூ.54, பீர்க்கங்காய் ரூ.66 நீர்பூசணி ரூ.20, பரங்கி ரூ.20 தேங்காய் 56 என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

News January 29, 2025

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் டூவிலர் அபராதம்

image

நாமக்கல் ஆட்சியர் அலுவலக நுழைவாயில்லில் இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி விட்டு சென்றனர். இதையடுத்து, ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில் வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியா் உத்தரவிட்டாா். அதனையும் மீறி வாகனங்கள் நிறுத்தினர். இந்த நிலையில், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளா் வெங்கடாசலம் 40க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு நேற்று ஆன்லைன் மூலம் தலா ரூ.500 அபராதம் விதித்தனா்.

News January 28, 2025

நாமக்கல் மாநகராட்சி நாளை சிறப்பு மருத்துவ முகாம்

image

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சியில் தினமும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நாளை 29/1/2025 காலை 9.30 மணிக்கு வார்டு எண்.4 செம்பாளி கரடு வடக்கு, மற்றும் காலை 11 மணிக்கு வார்டு எண்.11 செம்பாளி கரடு தெற்கு பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News January 28, 2025

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து அலுவலர்களின் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (28/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – ஆகாஷ் ஜோஷி (9711043610), ராசிபுரம் – விஜயகுமார் (9498104763), திருச்செங்கோடு – இமயவரம்பன் (94982030141), வேலூர் – இந்திராணி (9498169033) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News January 28, 2025

வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு

image

பேளுக்குறிச்சியை சேர்ந்தவர் பிரேமா. ராசிபுரத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இருவரும் நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உள்ள கடையில், கெண்ட் ஆரோ சிஸ்டம் தயாரித்த தண்ணீர் சுத்திகரிப்பான் வாங்கினர். சுத்திகரிப்பான் குறைபாடு இருந்ததால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதில், வீட்டுக்கு குறைபாடான தண்ணீர் சுத்திகரிப்பான் வழங்கிய நிறுவனம் இழப்பீடாக 1 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.

News January 28, 2025

கடந்த ஆண்டில் மட்டும் 2,000 கிலோ குட்கா பறிமுதல் 

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 2,202 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 485 கடைகளில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. 1 கோடியே 33 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. குட்கா பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு 9444042322 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

error: Content is protected !!