India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 12ந் தேதி நடைபெற்றது. இந்த குழுக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.65 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.65 ஆகவே நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டுவரும் மாவட்ட அலகில் இரண்டு பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு 25/2/2025 க்குள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அறை எண் 320, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விண்ணப்பங்களை கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில், தை மாத பெளர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணி அளவில் பஞ்சாமிருதம், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம், கொண்டு அபிஷேகமும், பின் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றுச் சென்றனர்.
நாமக்கல் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் PROJECT ASSOCIATE, YOUNG PROFESSIONAL என மொத்தமாக 3 காலியிடங்கல் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப நேர்காணல் முறை மூலம் பணி அமர்த்தப்படுவார்கள் . மாத ஊதியமாக ரூ 25000- ரூ31000 வரை ஆகும். இந்த வேலை ஒரு வருடம் மட்டுமே ஆகும். மேலும் விவரங்களுக்கு https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1738653153.pdf இந்த இணைய முகவரியை பார்க்கவும்,
கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் சொந்தமான ரிக் வண்டி வைத்துள்ளார். இவரிடம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நாகேஷ் வேலை பார்த்து வந்தார். நேற்று ரிக் வண்டியில் இருந்து இரும்பு கம்பிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது, இரும்பு கம்பியானது உயர் மின் அடுத்த கம்பியில் உரசியதால் தூக்கி வீசப்பட்ட நாகேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இது குறித்து நல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம், நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.65 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.65 ஆகவே நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி, இன்று (11/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராஜன் (9498170004), ராசிபுரம் – துர்க்கைசாமி (9498183251), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர் – சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
சேலம் – நாமக்கல் இடையேயான பேருந்து கட்டணம் ரூ. 3 குறைப்பால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தக் கட்டணம் குறைப்பு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் சேலம் – நாமக்கல் இடையே ரூ. 45-ஆக இருந்த கட்டணத்தை ரூ. 42-ஆக குறைத்துள்ளது. சாதாரண பேருந்துகளில் ரூ. 36 என்பதை ரூ. 33-ஆகவும், ஆண்டகளூர்கேட் முதல் நாமக்கல் வரை ரூ. 22 என்பது ரூ. 19-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
கொல்லிமலை வட்டம், வளப்பூா் நாடு பெரியகோயிலைச் சோ்ந்தவா் செல்லதுரை, விவசாயி. இவா் தனது நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளாா். அந்த தோட்டத்தில் கஞ்சா மற்றும் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் ஆய்வுசெய்த போலீசார் தோட்டத்தில் கஞ்சா பயிர் வைத்திருந்த விவசாயி செல்லதுரையை கைதுசெய்து அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம், நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.65 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பனி, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், முட்டை விலையில் எந்த விதமான மாற்றம் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.65 ஆகவே நீடிக்கிறது.
Sorry, no posts matched your criteria.