India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பரமத்திவேலூர் வட்டம் கபிலர்மலை ஒன்றியம் ஜேடர்பாளையத்தில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டி ராஜ வாய்க்கால் அமைத்த அல்லாள இளைய நாயகரின் பிறந்தநாள் விழாவில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி அவரது திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அல்லாள இளைய நாயகர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்துகொண்டு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (14-01-2025) நிலவரப்படி கறிக்கோழி பண்ணை விலை (உயிருடன்) கிலோ ரூ.101-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.83-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல் முட்டை விலை 480 காசுகளாக நீடித்து வருகிறது. முட்டை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக விலையில் மாற்றம் இன்றி 480 காசுகளாகவே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திரு அல்லாள இளைய நாயகரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், ஜேடர்பாளையம் ஊராட்சியில் உள்ள திரு அல்லாள இளைய நாயகரின் திருஉருவச் சிலைக்கு அரசின் சார்பில், நாமக்கல் ஆட்சித் தலைவர் ச.உமா இன்று (தை 1) காலை 9 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் இன்று அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சியளித்தார். அப்பொழுது மகாதீபம் காண்பிக்கப்பட்டது. காலை 10:30 மணி அளவில் சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு அலங்காரம் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு நிகழ்வு 19ஆம் தேதி இராசிபுரம் முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் Skill Training காலை 9.00 மணிக்கு நடைபெறுகிறது என ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 13-ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.80 ஆகவே நீடிக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (13/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – தியாகராஜன் (7200329581), ராசிபுரம் – குணசீலன் (9498100858), திருச்செங்கோடு – ரங்கசாமி (9487539119), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை பாதுகாத்திட முயற்சிகள் மேற்கொண்டு வரும் செயல்பாட்டாளர்கள், பொதுமக்கள் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் நீர்நிலை பாதுகாவலர்கள் விருது விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. இதில் ஒரு லட்சம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. 17/1/2025 க்குள் https://awards.tn.gov.in வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக எம்.பி. ராஜேஷ்குமார் தனது X பக்கத்தில் பொங்கல் வாழ்த்துக்களை கூறினார். அதில் அவர், உள்ளத்தில் அன்பு பொங்கட்டும், இல்லத்தில் மகிழ்வு பொங்கட்டும் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.