India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் அருகே அமைந்துள்ள வளையப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளில் தமிழக அரசு சிப்காட் அமைப்பதற்கு நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.இதனை எதிர்த்து சிப்காட் எதிர்ப்பு குழுவினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதுவும் பலன் அளிக்காததால்,இன்று காலை வளையப்பட்டி தபால் நிலையம் முன்பு சுமார் 6,000 மனுக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பும் போராட்டத்தில் சிப்காட் எதிர்ப்பு குழுவினர் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய காரணத்தாலும் மற்றும் மாம்பழம் சீசன் தொடங்கிய காரணத்தாலும் ஈக்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் ஆங்காங்கே மழை நீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்து கொள்ள வேண்டும் .ஈக்கள் அதிகம் உற்பத்தி ஆனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவு.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் (இரவு 8.30 வரை ) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் அவரது அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களின் கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைந்து முடித்து வைக்கப்படும் என்று எஸ்.பி உறுதியளித்தார்.
பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சார்ந்தோர் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக, சாத்தியக் கூறுகள் உள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன், குழுக் கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருவதாகவும், இதை பயன்படுத்திக்கொள்ளவும் நாமக்கல் ஆட்சியர் உமா நேற்று தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் வரும் வாகனங்களும் பள்ளிப்பாளையத்தில் இருந்து ஈரோடு செல்லும் வாகனங்களும் புதிய பாலத்தில் செல்ல வேண்டும் எனவும் பழைய பாலத்தில் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் தனியார், கூட்டுறவு மூலம் உர உரிமத்தில் முதன்மை சான்றுகள் இணைக்கப்பட்ட உரங்களையே நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என, வேளாண் துறை மாவட்ட இணை இயக்குநர் கவிதா தெரிவித்துள்ளார். மாவட்டத்திற்கு தேவையான உரங்கள் மொத்தம் 9,541 மெட்ரிக் டன் ஆகும். இவை தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது ஆய்வுகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. 2 ஆம் கட்டம் திட்டம் வரும் ஜீலை.11 முதல், ஆக.27 வரை, காலை 10 முதல் மாலை 3 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் 69 இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் ஜூலை 9 காலை 9.30 முதல் ‘ஆட்சிமொழி தமிழ்’ தலைப்பில் கட்டுரை போட்டி, குமரி தந்தை மார்ஷல் நேசமணி, தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும் நடைபெற உள்ளது என நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். முதல் பரிசு ரூ.10,000, 2ம் பரிசு ரூ.7,000, 3ம் பரிசாக, ரூ.5,000 வழங்கப்படவுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயர்கல்வித் துறையின் அறிவியல் நகரம் மூலம் 2023-2024 ஆம் ஆண்டிற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.scienceciteychennai.in & www.namakkal.nic.in தளங்களில் பெற்று, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக முகவரிக்கு 10.7.24க்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.