Namakkal

News July 10, 2024

மார்கழி குளிரில் குடைவரைத் தரிசனம்

image

நாமக்கலில் ரங்கநாதர் குடைவரைக் கோயில் மிகவும் பிரபலமானது. இது நாமக்கல் பேருந்துநிலையத்தில் இருந்து 200மீட்டர் தொலைவில் மலைக்கோட்டையில் அமைந்துள்ளது . இது கி.பி 8 ஆம் நூற்றாண்டில் மலையை குடைந்து கட்டப்பட்ட குடைவரைக் கோயில் ஆகும். ஒவ்வொரு மார்கழி மாதமும் இந்த ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இங்கு மக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

News July 10, 2024

நாமக்கலில் குடைவரைக் கோயில்

image

நாமக்கலில், நரசிம்மர் குடைவரைக் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் ஆஞ்சநேயர் கோயில் எதிர்ப்புறம் அமைந்துள்ளது. இது கி.பி 8 ஆம் நூற்றாண்டில் மலையை குடைந்து கட்டப்பட்ட கோயில்கள் ஆகும். இந்த குடைவரை கோயிலில் நரசிம்மர், உலகளந்த பெருமாள், வாமன அவதாரம் போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன. சிவன், பிரம்மா, விஷ்னு அவதாரமான நரசிம்மர் காணப்படுவதால் இக்கோயில் மும்மூர்த்தி தலமாக விளங்குகிறது.

News July 10, 2024

அப்ரண்டிஸ் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

image

நாமக்கல் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், நாமக்கல் வளாகத்தில் வரும் 15ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு தொலைபேசி 04286-290297, 79041 11101, 90802 42036ல் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

முன்னாள் படை வீரர்கள் குடும்பத்தினர் கவனத்திற்கு..!

image

நாமக்கல் கலெக்டர் உமா செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் படைவீரர்களின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து சான்றுபெற்று அதன்வாயிலாக இலவச தையல் இயந்திரம் பெறாதவர்கள் நாமக்கல் முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் ஜூலை 27க்குள் நேரில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

News July 9, 2024

நாமக்கல்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை விக்கிரவாண்டி தொகுதியில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பல்வேறு தொழில் வகை சார்ந்தவர்கள் வாக்களிக்க ஏதுவாக அவர்களுக்கு, நிர்வாகத்தின் சார்பில் நாளை சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

‘கல்பனா சாவ்லா’ விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

சமூகநலன் மகளிர் உரிமைத்துறையின் மூலம் 2024ம் ஆண்டிற்கு பெண்களில் சிறந்த சாதனை புரிந்தோர்களுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவில் பெண்களில் சிறந்த சாதனை புரிந்த ஒருவருக்கு மாநில அளவில் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளது. இதற்கு உரிய கருத்துரு வரவேற்கப்படுகிறது. மேலும், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

நாமக்கல்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும், உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க தமிழக அரசு மானியம் வழங்குகிறது. தகுதியான நபர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் விவரங்களை கேட்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 9, 2024

விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வேளாண்மைத் துறையின் மூலம் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற திட்டத்தின் கீழ், சிறந்த உயிர்ம வேளாண் விவசாயிக்கான “நம்மாழ்வார் விருது” மாநில அளவில் மூன்று விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கு நாமக்கல் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வேளாண் துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்” என கூறியுள்ளார்.

News July 9, 2024

நாமக்கல்: அதிரடி காட்டிய எஸ்.பி

image

நாமக்கல் மாவட்டத்தில், ஒரே போலீஸ் ஸ்டேசனில், 3 ஆண்டுகள் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்.ஐ.க்கள், போலீசார் மற்றும் விருப்ப மாறுதல் கேட்டவர்கள், புகாருக்கு உள்ளான நபர்கள் என 180 போலீசாரை ஒரே நாளில் இடமாற்றம் செய்து, நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார் அதன்படி 33 சிறப்பு எஸ்.ஐ.,க்கள், 18 பெண் போலீசார் உட்பட 180 போலீசார் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News July 9, 2024

நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக அதிகரித்தது. நேற்று முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை விலை 520 காசுகளாக நீடிக்கிறது.

error: Content is protected !!