India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் சூரிய ஒளியில் இயங்கும் சோலார் பம்பு செட் மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் நாமக்கல் வசந்தபுரம் மற்றும் திருச்செங்கோடு வரகூராம்பட்டியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொண்டு பயனடையுமாறு நாமக்கல் கலெக்டர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களுக்கான நேர்காணல் இன்று காலையில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணலை சேலம் மண்டல மேலாளர் அறிவுகரசு நடத்தினார். இதில் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் உதவியாளர்களின் பிளஸ் டூ சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இந்த நேர்காணலில் தற்போது வரை சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துள்ளனர்.
10-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் சூரியம்பாளையம், “செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து திருமண மண்டபத்தில்” சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கென சிறப்பு மருத்துவ முகாம் 7ம் தேதி நடைபெறவுள்ளது. ஆகவே பொதுமக்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் அனைவரும் இக்கண்காட்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்ட பதிவு கடந்த 15-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இன்று ஒரு நாள் மட்டும் பயிர் காப்பீடு பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் பாசிப்பயிறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம் என நாமக்கல் வேளாண் இணை இயக்குனர் கவிதா தெரிவித்துள்ளார்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, ஆகஸ்ட் 7-ஆம் தேதி பத்தாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சூரியம்பாளையம் செங்குந்தர் பாவடி திருமண மண்டபத்தில், சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை நெசவாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
நாமக்கல் நகரில் பல்வேறு வீடுகளில் பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த சுபாஷ். முகமது ரியாஸ், பிரபாகரன் ஆகிய மூன்று பேரை நேற்று இரவு நாமக்கல் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 15 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் கைது செய்த மூன்று பேரையும் விசாரணை செய்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் அதிமுகவில் புதியதாக நிர்வாகிகள் பலர் இணைந்துள்ளனர். புதிய உறுப்பினர் அட்டையை கழக பொது செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணியிடம் வழங்கினார். இந்நிகழ்வில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
நாமக்கல்லில் கறிக்கோழி கிலோ ரூ.99-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.12 குறைக்க முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.87-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முட்டை கோழி கிலோ ரூ.87-க்கும், முட்டை கொள்முதல் விலை ரூ.4.50 விற்பனையாகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடக்கும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆக.1 முதல் 3 வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதையொட்டி, டாஸ்மாக் கடைகளை மூடி வைக்க வேண்டும். மீறி செயல்பட்டால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் பரமத்தி வேலூர் வட்டம் ஜேடர்பாளையம், சரளைமேடு பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரிதன்யா மூன்று சக்கர மிதிவண்டி தேவை என மனு கொடுத்தார். உடனே அம்மாணவிக்கு மூன்று சக்கர மிதிவண்டியை ஆட்சியர் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.