India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 16ந் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே ரூ 5.40 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது.
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் தலைமை டாக்டர் பாரதி தலைமையில் இன்று நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் தங்கமணி, திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. சுகந்தி, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் (காசநோய்) வாசுதேவன் உள்பட பலர் பங்கேற்றனர். மருத்துவமனைக்கு தேவையான 30 போர்வைகளை முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்க, தலைமை டாக்டர் பாரதி பெற்றுக்கொண்டார்.
நாமக்கல், பரமத்திவேலூர் தாலுக்கா ஜேடர்பாளையம் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் கருக்கம்பாளையத்தைச் சேர்ந்த சிவா, பூமேஷ், சிறுகிணத்து பாளையம் சேர்ந்த சக்திநாதன் மூன்று பேரும் ஈரோட்டில் இருந்து அசோக் லைலாண்ட் தோஸ்த் வாகனத்தில் கபிலர்மலை நோக்கி வந்த போது தண்ணீர் பந்தல் அருகே சாலையின் எதிரே வந்த லாரியில் மோதி மூன்று பேர்களும் பலியாகினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.
நாமக்கல் நகரின் மத்தியில் நாமகிரி தாயாரையும் நரசிம்ம பெருமாளையும் இரு கைகளை கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் சுவாமி அருள் பாலித்து வருகிறார். இதனிடையே இன்று 16ஆம் தேதி கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மதியம் ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பல்வேறு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயர் சுவாமி வழிபட்டனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று 15 ந் தேதி நாமக்கல்லில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் விலையில் எந்த விதமான மாற்றம் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவிலேயே நீடிக்கிறது.
1. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் அன்னாபிஷேக பூஜை விமர்சையாக நடைபெற்றது.
2. நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் கொட்டிய கனமழை
3. பரமத்தி வேலூரில் மின் தடை அறிவிப்பு
4. திருச்செங்கோட்டில் 9ஆவது மாபெரும் இரத்ததான முகாம்
5.ஆனங்கூர் பகுதியில் நாளை மின் தடை
6.சேந்தமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
நாமக்கலில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்களில் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க குழு அமைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உமா அறிவுறுத்தி உள்ளார். அவரது செய்திக் குறிப்பில் அனைத்து அரசு, தனியார் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பணிபுரிந்தால் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் (தடுப்பு, தடை, தீர்வு) 2013இன் கீழ் குழு அமைக்கப்பட வேண்டும் என்றார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நவ.1இல் கிராமசபைக் கூட்டம் நடைபெற இருந்தது. பல்வேறு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் நவ.23ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டத்தில் வரவு செலவு பொது பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் நாளை (16.11.24) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பரமத்தி வேலூர், சேந்தமங்கலம், ஆனங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 10.30 மணி முதல் மாலை 03.00 மணி வரை நாமக்கல் பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரில் மோகனூர் ரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.