India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.முதலில் <

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (23-01-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ.145- ஆகவும், முட்டை கொள்முதல் விலை ரூ. 80- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ. 5.00 ஆகவும் நீடித்து வருகிறது. தைப்பூசம் நெருங்குவதை யொட்டி முட்டை விலை சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வது மற்றும் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல் தொடர்பான பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் வட்டங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. SHAREIT

UPI ஆப்பில் தானாக பணம் போகின்றதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <

சேலம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி கடந்த 20 வருடங்களாக எலச்சிபாளையம் அருகே, நெய்காரம்பாளையம் தனியார் கிரஷரில் கல் உடைக்கும் வேலை செய்து வந்தார். நேற்று அதிகளவில் மது அருந்திய பழனிச்சாமி தங்கியிருந்த வீட்டின் அருகிலிருந்த கல்குவாரியில் தவறிவிழுந்து உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த எலச்சிபாளையம் போலீசார் நேற்று இரவு 12 மணிக்கு பிரேதத்தை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் வரும் 26-ந் தேதி குடியரசு தினத்தன்று காலை 11 மணி அளவில் கிராமசபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் (ம) பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு தடுப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.இதில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாமகிரிப்பேட்டை அருகே திம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி சிலம்பரசன்(45), நேற்று காலை ஸ்கூட்டரில் வேலைக்குச் சென்றபோது, ராசிபுரத்திலிருந்து வந்த மற்றொரு டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹெல்மெட் கழன்று விழுந்து தலையில் பலத்த காயமடைந்த சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மங்களபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஜன.22) திருச்செங்கோடு அடுத்த சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க வேண்டி, கொமதேக பொதுச்செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார். இந்நிகழ்வில் கொமதேக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஜன.22) திருச்செங்கோடு அடுத்த சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க வேண்டி, கொமதேக பொதுச்செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார். இந்நிகழ்வில் கொமதேக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.