Namakkal

News September 22, 2024

நாமக்கல்லில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

image

நாமக்கல் மாவட்டம் கீரம்பூா், புலவா்பாளையம் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக நேற்று பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று, சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும், அவா்களிடமிருந்து ரூ.74 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 21, 2024

கீரம்பூர் சுங்க சாவடியை மூட எம்.பி மனு

image

நாமக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு மாநகராட்சியின் எல்லையில் இருந்து 10 கி.மீ தொலைவிற்கு சுங்கச்சாவடி இருக்கக் கூடாது என்ற விதிமுறையை கொண்டு கீரம்பூர் சுங்குச்சாவடியை அகற்ற வேண்டும் என்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளார்.

News September 21, 2024

தி.கோட்டில் பெட்ரோலை குடித்த குழந்தை பலி

image

திருச்செங்கோடு அருகே குட்டிமேய்க்கன்பட்டி ஜானகி என்பவர் தறிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு பாட்டிலில் இருந்த பெட்ரோலை தண்ணீர் என நினைத்து அவருடைய 2வயது குழந்தை அனுஜா குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை மயங்கி விழுந்ததை அடுத்து மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினார்.

News September 21, 2024

நாமக்கல் முட்டை கொள்முதல் விலை

image

நாமக்கல் மாநகராட்சியில் உள்ள கோழி பண்ணைகளில் இருந்து தினமும் கொள்முதல் செய்யப்படும் முட்டைகள், பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு ஒரு முட்டையின் விலை ரூ 5.05 ஆக நிர்ணயம் செய்துள்ளது. மேலும், கறிக்கோழி (உயிருடன்) ஒரு கிலோ ரூ.104 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News September 21, 2024

நாமக்கல்லில் லாரி மீது கார் மோதி விபத்து

image

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் நேற்று நாமக்கல்லில் இருந்து, சேலத்தை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ராசிபுரம் அருகே வந்த லாரி ஒன்று காரின் மீது மோத வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன ஓட்டுநர் லாரியிடம் இருந்து தப்பிப்பதற்காக காரை இடது புறமாக திரும்பியபோது, லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News September 21, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மிக முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் கனமழை உள்ளிட்ட பேரிடர் தொடர்பான தகவல்களை, பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மூலம் தெரிவிக்கலாம்.என
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம்

image

நாமக்கல் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம் சாற்றப்பட்டது. பின் மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் தரிசனம் பெற்றனர்.

News September 20, 2024

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் (ம) தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 9 மணி முதல் 3 மணி வரை மல்லசமுத்திரம், மகேந்திரா கல்லூரியில் நடைபெறுகிறது. வேலை வேண்டி விண்ணப்பிப்போர் தங்களுடைய சுய விவரம், உரிய கல்விச்சான்றுகள் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.

News September 20, 2024

நாமக்கல்: கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

image

நாமக்கல்: எருமைப்பட்டி அருகே உள்ள சிங்கள கோம்பை கிணற்றில் நேற்று 8 வயது சிறுவன் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சிறுவன் கொல்லிமலை பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்பவரது மகன் ஆவார். தனது தந்தையை பார்க்க வந்த அந்த சிறுவன் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News September 19, 2024

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம்

image

நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. புரட்டாசி மாத வியாழக்க்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

error: Content is protected !!