India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இரவு நேர ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகளை மாவட்ட எஸ்பி விமலா அறிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள சொல்லப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இந்த முக்கிய தகவலை SAVE செய்து, SHARE பண்ணுங்க!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

நாமக்கல் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க

நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ், பயனாளிகளின் இல்லங்களுக்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நாளை (பிப்.2) மற்றும் நாளை மறுநாள் (பிப்.3) ஆகிய 2 நாட்கள் இந்தச் சிறப்பு விநியோகம் நடைபெறவுள்ளது.

நாமக்கல் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177-11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். (இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க)

நாமக்கல் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3-ம் தேதிக்குள் <

கபிலர்மலையில் புகழ்பெற்ற பாலசுப்பிரமணிசாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று (பிப்.1) விமரிசையாக நடைபெறுகிறது. இதனையொட்டி நாமக்கல், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்த வருவார்கள். இதனால், பக்தர்களின் பாதுகாப்பிற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இன்று (ஜனவரி 31, 2026) இரவு ரோந்துப் பணிக்கான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் முக்கிய உட்கோட்டங்களான நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் வேலூர் பகுதிகளில் விழிப்புடன் செயல்பட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இன்று (ஜனவரி 31, 2026) இரவு ரோந்துப் பணிக்கான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் முக்கிய உட்கோட்டங்களான நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் வேலூர் பகுதிகளில் விழிப்புடன் செயல்பட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.