Namakkal

News December 5, 2024

சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சிநேயர்

image

நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்திகை மாத வியாழக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர்சிறப்பு அலங்காரம் பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

News December 5, 2024

இந்திய அரசு நடத்தும் யுவ உத்சவ் 2024-2025

image

இந்திய அரசு, நேரு யுவகேந்திர நாமக்கல் மாவட்டம் மற்றும் JKKN கல்லூரி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான யுவ utsav 2024-2025 ஏழு வகையான விளையாட்டுகளைக் கொண்டு குமாரபாளையத்தில் உள்ள ஜே கே கே என் கல்லூரியில் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற விரும்புபவர்கள் https://forms.gle/mF8FUxewKcYCrZz66 இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். தகுதி 15 வயதுக்கு மேல் 29 வயதுக்குள் கலந்து கொள்ள முடியும்.

News December 5, 2024

நாமக்கல்லில் சதம் அடித்த அவரை விலை

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய விலை நிலவரம்: கத்தரி ரூ.72, தக்காளி ரூ.60, வெண்டை ரூ.52, தேங்காய் ரூ.52, எலுமிச்சை ரூ.55, சி.வெங்காயம் ரூ.42, பெ.வெங்காயம் ரூ.70, பீன்ஸ் ரூ.60, கேரட் ரூ.80, பீட்ரூட் ரூ.80, உருளை ரூ.48, முருங்கை ரூ.120 க்கு விற்பனையாகிறது. மேலும் தற்போது அவரை விலை ரூ.100ஐ தொட்டுள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். உங்கள் பகுதியில் என்ன விலையில் விற்பனையாகிறது கமெண்ட் பண்ணுங்க.

News December 5, 2024

நாமக்கல்லில் வணிகர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு 

image

தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில், மத்திய அரசின் வாடகை மீதான 18% வரி விதிப்பு திரும்ப பெற வலியுறுத்தியும், மாநிலஅரசு ஆண்டுதோறும் 6% கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்பபெற வலியுறுத்தியும், வணிக உரிம கட்டண உயர்வு மற்றும் தொழில்வரி உயர்வை ரத்துசெய்ய கோரியும் வலியுறுத்தி நாமக்கலில் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். 

News December 5, 2024

நிவாரண வாகனத்தை வழி அனுப்பி வைத்த அமைச்சர்

image

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் இன்று (4.12.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பல்வேறு வகையான நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் கனரக வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா உட்பட பலர் உடன் இருந்தனர்.

News December 4, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

சட்டமன்ற பேரவையின் 2024-25 மனுக்கள் குழு விரைவில் தொடங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்ட பகுதியில் தனிநபர் சங்கம் அல்லது நிறுவனம் ஆகியவற்றால் பொதுப் பிரச்சினைகள்/ குறைகள் பற்றி (ஐந்து நகல்) தமிழில் மட்டும் தேதியுடன் குறிப்பிட்டு, தலைவர் மனுதாரர் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை 600009 என்ற முகவரி இட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேரில்/ தபால் மூலமாக வரும் 20ம்தேதிக்குள் அனுப்பவேண்டும்.

News December 4, 2024

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 4, 2024

தி.கோடு அருகே வெள்ளநீரில் சிக்கியவர்கள் பரிசலில் மீட்பு

image

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இலுப்புலி கிராமத்தில் திருமணிமுத்தாறு கரையில் சிலர் குடும்பத்துடம் வசித்து வந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழையில் திருமணிமுத்தாறு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கல் தண்ணீர் வீடுகளை சூழ்ந்தது. அதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் தண்ணீர் சிக்கிக் கொண்டவர்களை பரிசலில் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.

News December 4, 2024

ஓய்வூதிய குறைதீர்க்கும் கூட்டம்

image

நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் (26/12/2024) அன்று காலை 10 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சென்னை ஓய்வூதிய இயக்குனர் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்கள் விண்ணப்பங்களை (12/12/2024) தேதிக்கு முன்னதாகவே அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

முட்டை விலை வரலாறு காணாத விலை உயர்வு

image

முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.85 காசுகளில் இருந்து 5 காசுகள் உயர்த்தி ரூ. 5.90 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று (3-12-2024) மாலை அறிவித்துள்ளது. இந்த விலை இன்று (4-12-2024) காலை முதல் அமலுக்கு வருகிறது. தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் இது முறை என்பது தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!