India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை முகாம் அலுவலகத்தில், இன்று நவம்பர் 19, நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகூர் தர்கா தலைமை நிர்வாக அறங்காவலர் சையது முகமது காஜி ஹுசைன் சாஹிப் இடம் வழங்கினார். உடன் இந்த நிகழ்வில் நாகூர் தர்கா நிர்வாக உறுப்பினர்கள் இருந்தனர்.
இ – சேவை மையங்களில் பொதுமக்கள் பெறும் சாதி இருப்பிட சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகளுக்கும் அதிக பட்சமாக ரூ.60-ம் முதியோர், விதவை உள்ளிட்ட ஓய்வூதிய சான்றுகளுக்கு ரூ.10-ம் திருமண உதவி திட்ட சான்றுகளுக்கு ரூ.120-ம், மின்கட்டணம் ரூ.1000 வரை ரூ.15ம் அதிகபட்சமாக ரூ.60 வரை மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22.11.2024 காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஐடிஐ, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் முகாமில் கலந்துக்கொள்ளலாம் என்று ஆட்சியர் ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் புதிதாக உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மேலும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் வரும் நவ.23-ஆம் தேதிக்குள் (சனிக்கிழமை) கரை திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின இன மாணவர்கள் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் வயது 58. இவர் என்று கடலுக்கு மீன் பிடிக்க சென்று திரும்பிய அவர் தனது வீட்டின் அருகில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பாஸ்கர் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி வெளிப்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நாகை அருகே செல்லூர் பகுதியில் தமிழக அரசு சார்பில் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் மாவட்ட வளர்ச்சி குழுமத்தினர் விளை நிலங்களில் டைடல் பார்க் அமைவதை கைவிட்டு நகரின் மத்தியில் ஆர்.டி.ஒ. அலுவலகம் அருகே அமைக்க வலியுறுத்தி நேற்று மனுநீதி நாளில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு வங்கி கடன் உதவி தொகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 200 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அணுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி ஊராட்சி, காரைநகரை சேர்ந்த சதீஷ்குமார் – சுபஸ்ரீ தம்பதியரின் 4 மாத பெண் குழந்தை தலைவர்களின் புகைப்படங்கள், பழங்கள் ஃபிளாஸ் கார்டு மூலம் அடையாளம் காட்டுதலில் நோபல் சாதனை படைத்துள்ளார். இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷை குடும்பத்தினர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நாகை மாவட்டத்தில் குறுந்தொழில் முனைவோர்கள் மற்றும் குறு நிறுவனங்கள் கலைஞர் கடனுதவி திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அல்லது தாய்கோ வங்கி கிளை மேலாளரை அணுகி 7 சதவிகித வட்டியில் ரூ.20 லட்சம் வரை நடைமுறை கடன் மற்றும் மூலதன கடன்களை இத்திட்டத்தில் பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.