India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் ஆகாஷ் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் பட்டாசு வெடிக்கும் போது கால் நடைகள் கட்டி இருக்கும் இடத்தில் வெடிக்க கூடாது. அதனால் மிரண்டு ஓடும் கால்நடைகளால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அவதி அடைவர். மேலும் பட்டாசுகளினால் விபத்து ஏற்பட்டால் காவல் துறைக்கு 100 தீயணைப்பு துறைக்கு 101, மருத்துவ உதவிக்கு 108, தேசிய உதவி எண் 112 ஆகியவற்றை தொடர்புகொள்ள கேட்டு கொண்டுள்ளார்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் 2024-25 ஆண்டுகளுக்கான கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பெரிய குத்தகை பகுதியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்
விபத்தில்லா மற்றும் ஒலி மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களை நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகை வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொதுமக்கள் தீபாவளி பாண்டிகையை பாதுகாப்பான வகையிலும், அதிக மாசு ஏற்படாத வகையில், பசுமை பட்டாசுகள் மட்டும் வெடித்து கொண்டாட அறிவுறுத்தினார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் சந்திரவேல் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மாநில செயலாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு குறைகள் தொடர்பாக 9 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க சரக போலீசாருக்கு உத்தரவிட்டார்.
டானா என பெயரிடப்பட்டுள்ள புயல் தீவிர புயலாக வலுப்பெற்று, 24ஆம் தேதி இரவு மற்றும் 25ஆம் தேதி காலை பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, கடலூர், எண்ணூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி நாகை, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அயோடின் குறைபாட்டால் தைராய்டு, அறிவு குறைவு, மனக்கோளாறு, கருச்சிதைவு போன்றவை ஏற்படுகிறது. இவ்வாறான பிரச்சனைகளைத் தவிர்க்க அயோடின் கலந்த உப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே உப்பு விற்பனை செய்பவர்கள் அயோடின் கலந்த உப்புகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அயோடின் இல்லாத உப்பு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் எச்சரித்துள்ளார்.
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 11 கடைசி தேதி ஆகும். எனவே தகுதியான விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு நடுவர்கள் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நேற்று தெரிவித்துள்ளார். SHAREIT
நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (24.10.24) காலை 11 மணியளவில் கடன் வசதி முகாம் மாவட்ட தொழில் மையம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் நடத்தப்படவுள்ளது. இதில் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் கடன் திட்டங்கள் குறித்து தகவல்கள் அளிக்கப்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஐப்பசி மாத சஷ்டி திதியை முன்னிட்டு எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகனின் ஆதி படை வீடு என அழைக்கப்படும் இக்கோவிலில் மூலவராக உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு 14 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து, விபூதி காப்பு சாத்தப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.