India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நாகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.அப்போது 12 மணிக்கு திமுகவின் இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி விவசாய அணி, நெசவாளர் அணி, மகளிரணி உள்ளிட்ட பல்வேறு சார்பு அணி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
வெண்மணி ஊராட்சி கீழகாவாலக்குடி சேர்ந்த தர்மராஜ் கீழகாவலக்குடி பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் சாராயம் விற்பனை தொடர்பான வழக்கு உள்ளது. மீண்டும் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டார் அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழையூர், கீழ்வேளூர், திருமருகல், தலைஞாயிறு, வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 193 ஊராட்சிகளில் நாளை உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பழைய நாகூர் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் புதிய கட்டிடம் கட்டப்பட்டதால் நாகை, வெளிப்பாளையத்தில் இயங்கி வரும் அலுவலகம் 23ம் தேதி முதல் நாகப்பட்டினம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் புதிதாக கட்டிடத்தில் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். நாகை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு வரும் 06.12.20240-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகூர் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகூர் நலன் மக்கள் மேம்பாட்டு குழு சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், மனிதனா மாடா திரியும் கால்நடைகளால் விபத்துகள் எண்ணிலடங்கா துயரங்கள், ஒராயிரம் மனுக்கள் அலட்சியம் துயரங்கள் அரசு என்றும் நாகை நகராட்சியை காணவில்லை என்றும் அச்சிடப்பட்டுள்ளது.
நெய் விளக்கு கடிநெல் வயல் ஆதனூர் தேத்தாகுடி தெற்கு மற்றும் பெரிய குத்தகை ஊராட்சிகளை வேதாரண்யம் நகராட்சியுடன் இணைக்கப் போவதாக தவறான தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதாக தகவல்கள் வருகிறது. ஆனால் மேற்கண்ட கிராமங்களை நகராட்சியுடன் இணைக்கும் திட்டம் எதுவும் நடவடிக்கையில் இல்லை எனவே மேற்கண்ட வதந்தி செய்திகளை நம்ப வேண்டாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்
தேர்தல் நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நம்பி அரசு ஊழியர்கள் அவரை தேர்ந்தெடுத்தனர். ஆனால், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முதல்வர் ஸ்டாலின் ஊழியர்களுக்கு அல்வா கொடுத்து விட்டது என நாகையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
நாகப்பட்டினம் திமுக சார்பில் வரும் 24ஆம் தேதி அவுரி திடலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதற்காக கோட்டை வடிவிலான பிரம்மாண்ட பந்தல் தயாராகி வருகிறது. மீனவர்கள் விவசாயிகள் தூய்மை பணியாளர்கள் என 2,513 நபர்களுக்கு மீன்பிடி வலை மருந்து தெளிப்பான் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் வழங்க உள்ளார்.
பிரதமர் சூரிய வீடு இலவச மின்திட்டத்தில் மானியமாக 1 கிலோ வாட்க்கு ரூ.30000, 2 கிலோ வாட்க்கு ரூ.60 ஆயிரம் 3 கிலோ வாட் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடனுதவியும் வழங்கப்படுகிறது. எனவே சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி பசுமையான ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.