India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சி அளித்து முடிவில் வேலை வாய்ப்பும் பெற்றுத்தரப்பட உள்ளது. பயிற்சியில் சேர www.tahdco.com இணைய தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திருச்சி, திருவாருர், நாகை வழியாக காரைக்கால் வரை பகல் நேரத்தில் தினசரி விரைவு ரயில் இயக்க வேண்டும் எனவும், ஈரோடு – திருச்சி ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும் எனவும் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட பொது மேலாளருக்கு நாகூர் – நாகை ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் என்பது நகரிலிருந்து உருவானது. நகரி என்பது இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தையும் குறிக்கும். முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. மேலும் இது பண்டைய தமிழ்நாட்டின் மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழை முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (ஜன.11) கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பயிர்கள் அறுவடைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு விவசாயிகளை சற்று கலக்கம் அடைய செய்துள்ளது. SHARE NOW!
நாகப்பட்டினம் மாவட்டம் பழைய கடற்கரையில் நேற்று (ஜன.10) மணல் சிற்ப போட்டி நடைபெற்றது. இதில் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து அழகழகான மணல் சிற்பங்களை செய்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். கடல் வாழ் ஆமை இனத்தை காப்பதை முக்கியமான நோக்கமாக கொண்டு இந்த போட்டி நாகப்பட்டினம் வனத்துறை மூலம் நடத்தப்பட்டது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரோஹித் தமாங் (26) என்பவர் நாகை ரெயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். ரோகித் தமாங் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள தனது மனைவியை பார்க்க சென்றுள்ளார். அப்போது தனது மனைவி மற்றொருவரை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரோகித் தமாங் நேற்று முன்தினம் (ஜன.09) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவனின் கள்ளக்காதலியை கொடூரமாகக் கொலை செய்த வள்ளி என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நாகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேசன் (36) என்பவரது மனைவி வள்ளி (30) இவர் தனது கணவர் கார்த்திகேசனுடன் கள்ளத்தொடர்பிலிருந்த சுகன்யா என்ற பெண்ணை கடந்த 2016ஆம் ஆண்டு கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொடூரமாகக் கொலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்குவளை அருகே எட்டுக்குடியில் செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் தொழில் நுட்ப மையத்தினை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் இன்று (10.01.2025) ஆய்வு செய்து, தொழில் நுட்ப மையத்தில் உள்ள இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் கேட்டரிந்தார்.அப்போது தொழிற்பயிற்சி முதல்வர் மற்றும் ஆசிரியர் உடன் இருந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகின்ற 27 ந்தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கவுள்ளது .மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த சமையல் எரிவாயு நுகர்வோர் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து உரிய தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகையில் உள்ள பொன்னி சித்திர கடல் ஓவிய பயிற்சி கூடத்தில் 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக ஓவிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான நுழைவு தேர்வு பிப்ரவரி 1 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் ஜனவரி 30ஆம் தேதிக்குள் 9003757531 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.