Nagapattinam

News March 8, 2025

வாஞ்சூரில் சாராயம் கடத்திவந்த 2 பெண்கள் கைது

image

நாகூரை அடுத்த வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியே நாகை வெளிப்பாளையம் கோமதி (வயது 37) வெளிப்பாளையம் ராமநாயக்கன்குள பகுதியை சேர்ந்த இந்திரா (வயது 67) 110 லிட்டர் புதுவை சாராயம் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

News March 8, 2025

நாகப்பட்டினத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.

News March 8, 2025

நாகை: ரூ.1,30,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

image

தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச்.10 கடைசி நாளாகும். பிறரும் பயனடைய SHARE பண்ணுங்க…

News March 7, 2025

நிலங்களை அளவிட செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

image

நாகையில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்பித்து வந்தநிலையில், வட்ட அலுவலகங்களுக்கு https://tamilnilam.tn.gov.in/citizen நேரில் செல்லாமல், புதிய வசதியை  முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

News March 7, 2025

முன்னாள் படை வீரர் கருத்தரங்க கூட்டம் முன்கூட்டியே நடைபெற உள்ளது

image

முன்னாள் படை வீரர் மற்றும் சார்ந்தோர் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் தொடர்பான கருத்தரங்க கூட்டம் மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 12.3.25 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்க கூட்டத்தில் நடைபெற உள்ளது. 19.3.25 நடக்க இருந்த கருத்தரங்க கூட்டம் நிர்வாக காரணங்களினால் முன்கூட்டியே 12.3.25 என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்கள்.

News March 7, 2025

நாகை: கவுரவ நிதி திட்டத்தில் பயன்பெற அழைப்பு

image

நாகை மாவட்டத்தில் பாரத பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் இதுவரை பயன் பெறாத விவசாயிகள் ஜனவரி 2019க்கு முன் தன் பெயரில் உள்ள சொந்த நிலத்திற்கான ஆவணங்கள் மற்றும் ஆதார் எண்ணுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று பதிவு செய்து ஆண்டுக்கு ரூ.6000 மூன்று தவணைகளாக பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News March 7, 2025

நாகை: வாலிபால் போட்டிக்கான தேதி அறிவிப்பு

image

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் புதிய கடற்கரையில் நடத்தப்படுகின்றன. மகளிருக்கு 15 மற்றும் 22 தேதிகளிலும் ஆண்களுக்கு 16 மற்றும் 23 தேதிகளிலும் நடக்கின்றன. ரூ.50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு 9342499783 மற்றும் 96293-70402 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News March 6, 2025

15ஆம் தேதி வரை விவசாயிகளுக்கு அவகாசம்

image

நாகை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள அட்டை வழங்குவதற்கு ஊராட்சி மன்றம் கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் தங்களுக்கான தனித்துவ அட்டை பெற மார்ச் 15 கடைசி தேதி என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News March 6, 2025

வியாபாரம் செழிக்க ஒரு முறையாவது இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க!

image

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே அய்யன்பேட்டையில் ஸ்ரீ படி அளந்தநாயகி சமேத செட்டியப்பர் கோயில் உள்ளது. சிவபெருமான் தராசு பிடித்தும், பார்வதி தேவி அளவை படியை ஏந்தியும் வியாபாரம் செய்யும் கோலத்தில் காட்சியளிக்கும் இந்த கோயிலுக்கு வியாபாரிகள் ஒரு முறை சென்று தரிசித்தால் தங்களது வியாபாரம் பெருகும், நஷ்டம் தீரும் கடன்கள் அடையும் என்பது ஐதீகம்.. வியாபார நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

News March 6, 2025

மருமகளை கொன்ற சின்ன மாமியாருக்கு ஆயுள் தண்டனை

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வாட்டாக்குடியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி மல்லிகா(28). குழந்தை இல்லாததால் கடந்த 2015ஆம் ஆண்டு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையின்போது மல்லிகாவின் சின்ன மாமியார் பக்கிரியம்மாள்(50) மல்லிகாவை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்றுள்ளார். தற்போது இந்த வழக்கில் பக்கிரியம்மாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

error: Content is protected !!