India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகுடன் நாகை மீனவர்கள் 11 பேர் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யபட்டனர். நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு பருத்தித்துறை வடகிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது 11 மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவையொட்டி ஆக.29ல் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும், விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்.29இல் நாளாக செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டை விட விரிவான ஏற்பாடுகள் செய்து வருவதுடன், தமிழகம் முழுவதிலும் இருந்து விழா நாட்களில் கூடுதலாக 1,050 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பிற்கு பேராலய அதிபர் இருதயராஜ் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.08.2024 வெள்ளி அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் செய்தி குறிப்பு வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி மற்றும் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இணைந்து மூன்று நாட்கள் சிறப்பு அறிவியல் கண்காட்சி ‘ஃபியூச்சர் எக்ஸ்போ 24’ இன்று துவங்கியது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். தொடர்ந்து கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த படைப்புகளை பார்வையிட்டு அதன் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.
தமிழகத்தின் கோவை, தேனீ, தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
நாகை அரசு மருத்துவமனைவியில் நாகை மாவட்ட கலெக்டர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை சந்தித்து, மருத்துவமனைக்கு வரும் வெளி நோயாளிகளுக்கு கால விரயமின்றி உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார். மேலும் மருத்துவமனையை தூய்மையாக வைத்துக்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை, லேசான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு திருவனந்தபுரம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து 28ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் 4ஆம் தேதி ஆகிய நாட்களில் பிற்பகல் 3.25 மணிக்கு புறப்படும். மறு வழித்தடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து வரும் 22, 29 மற்றும் அடுத்த மாதம் 5ஆம் தேதி ஆகிய நாட்களில் இரவு 7.10 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கீழ்வேளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இதில் பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உறுப்பினர்கள் வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.