India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் இன்றைய வெப்ப நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தமிழநாட்டில் அதிகபட்சமாக நாகப்பட்டினம், தஞ்சாவூரில் தலா 102 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதற்கடுத்தபடியாக மதுரை விமான நிலையம் 102, காரைக்காலில் 101 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடுமையான வெப்பத்தால் நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களுக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனிநபர்கள் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.மேலும் தகவல்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
மேலப்பிடாகையில் கடந்த 4-ந்தேதி தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 200 கிலோ கஞ்சா சிக்கியது. இதில் தெட்சணாமூர்த்தி, சிவமூர்த்தி, மணிராஜ், கௌதம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான கோடியக்காட்டை சேர்ந்த அறிவழகன் என்பவரை தனிப்படை போலீசார் இன்று பிரதாபராமபுரத்தில் கைது செய்தனர். இவர் அதிமுகவை சேர்ந்த வேதாரண்யம் ஒன்றிய குழு வைஸ் சேர்மன் ஆவார்.
நாகை மாவட்டத்தில் தொடர் சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மி.ஆர்.புரத்தைச் சேர்ந்த ஆண்டனிராஜ், செல்லூர் பகுதியைச் சேர்ந்த பதினெட்டாம்படியான், ஜெல்சன், கீழ்வேளூரைச் சேர்ந்த சபரிநாதன், வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கமல் ஆகிய 5 நபர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்து எஸ்பி ஹர்ஷ் சிங் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் திருச்சி, மதுரை, நாகை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் 9 காவல்துறை அதிகாரிகள் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நாகை துணைக் கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் வேதாரண்யத்திற்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேற்கு மத்திய வங்க கடலில் ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர பிரதேச கடலில் இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் நாளை 20ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனையொட்டி நாகை துறைமுகத்தில் இன்று 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகை புதிய முகமதியார் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன், பால் வியாபாி. வீட்டில் பால் கறந்த போது, அவருக்கு தாகம் அதிகமாக இருந்ததால், தண்ணீர் என நினைத்து அங்கு பாட்டிலில் இருந்த மாட்டுப் புண்களுக்கு பயன்படுத்தும் மருந்தை தவறுதலாக குடித்துள்ளார். இதையடுத்து ஒரத்தூர் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட வேளாண்துறை அலுவலகம் நேற்று மாலை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “நெல் பயிர்களை விதைக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், சம்பந்தபட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் விதைப்பு சான்று பெற்று விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். மேலும், இது குறித்த விவரங்களுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம்” என தெரிவிக்கபட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்திலும் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிட்டத்தக்கது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
நாகை மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தெத்தி அருகே உள்ள ஈஜிஎஸ் பிள்ளை கல்லூரி அருகாமையில் வாகன தணிக்கை இன்று நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் காஞ்சனா தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, நாகை போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் வில்சன் ஜார்ஜ், சந்திரசேகரன் மற்றும் போக்குவரத்து காவலர்கள், சாலை விதிகளை மீறிய 44 வாகனங்களை சிறைப்பிடித்தனர்.
Sorry, no posts matched your criteria.