India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மாவட்டத்தை சேர்ந்த பட்டியலின விவசாயிகள் 50 பேருக்கு, எண்ணெய் வித்து பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் குறித்த ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி, வருகிற 6ஆம் தேதி சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடத்தப்பட உள்ளது. விவரங்களுக்கு 80567-08663 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அமமுக மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் அதிமுக கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் அதிமுக நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

நாகை செல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நாகை, திருமருகல், சிக்கல், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, விழுந்தமாவடி, வேதாரண்யம், கரியாபட்டினம், வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல்நிலையில் உள்ள முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக பணியமர்த்தப்பட உள்ளனர். மத்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவுக் கட்டணம், மதிப்பூதியம் இவர்களுக்கு வழங்கப்படும். முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர் நல அலுவலரை அணுக நாகை ஆட்சியர் தெரிவித்தார்.

நாகை மக்களே, <

நாகை மக்களே, உணவு பொருட்களுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க:<
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து மார்ச் 6ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல், போக்குவரத்து சேவை வானிலை சரியானதால் மீண்டும் மார்ச் 6-ல் தொடங்கப்பட உள்ளது. டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
Sorry, no posts matched your criteria.