Nagapattinam

News March 6, 2026

நாகை: இளைஞரிடம் ரூ.6.34 லட்சம் மோசடி

image

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியைச் சேர்ந்தவர் முகேஷ்(31). இவர் மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி, அடையாளம் தெரியாத நபர்கள் இணைத்த வாட்ஸ்அப் குரூப் மூலம் ரூ.6.34 லட்சம் அனுப்பியுள்ளார். பணம் அனுப்பிய பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டதால் மோசடி வெளிச்சத்திற்கு வந்த நிலையில், முகேஷின் புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 6, 2026

நாகை: லாரி மோதியதில் தலை நசுங்கி முதிவர் பலி

image

நாகை மாவட்டம்ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தாணிக் கோட்டகம் கடைத்தெருவில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, அவ்வழியே வந்த டாரஸ் லாரி மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே தலை நசங்கி கணேசன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வாய் மேடு போலீசார், லாரி ஓட்டுநர் பாஸ்கரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News March 6, 2026

நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஐ. சலீம் பாட்சா என்பவர் குறை தீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். wனவே பணிபுரிபவர்கள் வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் கைப்பேசி எண் 8925811317, 9952606948 மற்றும் மின்னஞ்சல் முகவரியில் saleembatcha226@gmail தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News March 6, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் (மார்ச்.05) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

நாகை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

நாகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1.நாகை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04365-248121
2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3.Toll Free: 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 5, 2026

நாகை: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

image

நாகை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே கிளிக் செய்து, <>சஞ்சார் சாத்தி<<>> என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின் அதில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு எளிதாக Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-ஐ டிரேஸ் செய்து, Easy-ஆக கண்டுபிடிக்கலாம். SHARE பண்ணுங்க!

News March 5, 2026

நாகை: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 349
3. வயது: 20 – 25
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,25,100
5. கல்வித்தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 12.03.2026
7. விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 5, 2026

நாகை: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News March 5, 2026

நாகை: 3 நாட்களுக்கு குடிநீர் ரத்து

image

நாகை மாவட்டத்தை சேர்ந்த 893 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. அப்போது குடிநீர் குழாய்களில் அங்கங்கே உடைப்பு ஏற்பட்டு அதனை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எதிர்வரும் மார்ச் 5 ,6,7 ஆகிய 3 நாட்களுக்கு கீழ்வேளூர், கீழையூர் , தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

News March 5, 2026

நாகை: 3 நாட்களுக்கு குடிநீர் ரத்து

image

நாகை மாவட்டத்தை சேர்ந்த 893 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. அப்போது குடிநீர் குழாய்களில் அங்கங்கே உடைப்பு ஏற்பட்டு அதனை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எதிர்வரும் மார்ச் 5 ,6,7 ஆகிய 3 நாட்களுக்கு கீழ்வேளூர், கீழையூர் , தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!