Mayiladuthurai

News August 2, 2024

சீர்காழி: எஸ்.ஐ வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

image

சீர்காழியை அடுத்த திருவெண்காடு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கணேசன் (58). இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டின் வாசலில் மர்ம நபர் ஒருவர் மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றார். இதில் கணேசனின் கால் மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்ப்பட்டது. முன்விரோதம் காரணமாக கணேசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

News August 2, 2024

மயிலாடுதுறை: குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே குளிக்க அனுமதி

image

காவிரியில் 1,20,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறையில் நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி துலாக்கட்டத்தில் காவலர்கள் அனுமதிக்கும் இடங்களில் மட்டுமே இறங்கி குளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண் 1077 அல்லது 9442626792 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News August 1, 2024

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சீர்காழி அருகிலுள்ள வெள்ளமணல் , நாதல்படுகை, காட்டூர், அளக்குடி,  முதலைமேடு கிராமங்கள் வெள்ளநீரால் பாதிக்கப்பட கூடும். எனவே முன்னெச்சரிக்கையாக நீர்வளத்துறை சார்பில் 10000 மணல் மூட்டைகள், 30000 காலிசாக்குகள், 200 சவுக்கைமரங்கள், 10 ஜேசிபி எந்திரங்கள், 5 டிராக்டர்கள், 2 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

வெள்ள அபாய எச்சரிக்கை : இலவச எண்கள் அறிவிப்பு

image

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 04364 240100, 9442626792 உள்ளிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

மயிலாடுதுறை வழியாக செல்லும் அந்தோதயா ரயில் சேவை நிறுத்தம்

image

தாம்பரம் ரயில் நிலையம் பராமரிப்பு காரணமாக 14.8.24 வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வழியாக நாகர்கோவில் வரை செல்லும் அந்தோதயா ரயில் சேவை 14.8.24 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. உழவன், கம்பன், ராமேஸ்வரம், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போல் தாம்பரம் வழியாக எழும்பூர் வரை இயக்கப்படுகிறது.

News August 1, 2024

மயிலாடுதுறை விவசாயிகளுக்கு அழைப்பு

image

மாநில அளவில் பாரம்பரிய நெல் சாகுபடிக்கான பயிர் விளைச்சல் போட்டி நடைபெற உள்ளது. இதில், “பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது” வழங்கப்பட உள்ளது‌. எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் ஆட்சியர் ஆய்வு

image

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 2,00000 கனஅடி உபரி நீர் திறக்கப்படுவதால் திட்டு கிராமங்களான வெள்ளமணல், முதலைமேடுதிட்டு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். கிராம மக்கள் தங்களது உடைமைகளையும், ஆடு, மாடுகளையும் அரசு அறிவித்துள்ள முகாம்களில் தங்க வைக்குமாறு அறிவுறுத்தினார்.

News August 1, 2024

பராமரிப்பு காரணமாக ரயில் வழித்தடங்கள் மாற்றம்

image

தாம்பரம் ரயில் நிலையம் பராமரிப்பு காரணமாக மயிலாடுதுறை வழியாக செல்லும் ரயில்கள் 14.08.24 வரை மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. அகமதாபாத் ரயில் திருத்தணி மயிலாடுதுறை வழியாக திருச்சி செல்கிறது. அதை போன்று அயோத்தியா லிருந்து வரும் இரயில் விழுப்புரம் மயிலாடுதுறை வழியாக ராமநாதபுரம் செல்லுகிறது. பனாரஸில் இருந்து ராமேஸ்வரம் வரும் இரயில் நெல்லூர் மயிலாடுதுறை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.

News August 1, 2024

மக்களுடன் முதல்வர் முகாமில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

image

மயிலாடுதுறை வட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் பட்டமங்கலம், ஆனைமேலகரம், மறையூர், மூவலூர், சித்தர்காடு ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி சோழம்பேட்டை கிராமத்தில் நடைபெறவுள்ளது. மு.பு.சு திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறும் இம்முகாமில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக வழங்கி தெரிவிக்கலாம் என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

மயிலாடுதுறையில் பணி ஓய்வு பெறும் காவலர்களுக்கு பாராட்டு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் பணி ஓய்வு பெற்றனர். இதனிடையே இருவரையும் நேற்று நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

error: Content is protected !!