Mayiladuthurai

News September 9, 2024

குத்தாலம் அருகே தமிழாசிரியரை தாக்கிய 3 பேர் கைது

image

குத்தாலம் புதுநகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கலைவேந்தர் (வயது 90). தமிழ் ஆசிரியரான பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் இரண்டு மர்ம நபர்கள் சிலர் அவரை தாக்கி ரூ.14,000 ரொக்க பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் இன்று குத்தாலம் போலீசார் மூன்று பேரை கைது செய்த்தனர், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

News September 9, 2024

மயிலாடுதுறையில் நாளை ‘உயர்வுக்கு படி’ சிறப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் உயர்வுக்கு படி முகாம் நாளை (செப்-10) தருமபுரம் ஆதீனம் கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ சேராமல் இருக்கும் மாணவர்களுக்கு படிப்பிற்கான உதவிகள் முகாமில் செய்யப்பட உள்ளது. மாணவர்கள் இம்முகாமை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 8, 2024

மயிலாடுதுறை ரயில் பயணிகளுக்கு அறிவிப்பு

image

மயிலாடுதுறை வழியாக செல்லும் காரைக்கால் – சென்னை எக்மோர் (16176) ரயில், இன்று முதல் தாம்பரத்துடன் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை எக்மோர் செல்லாது என கூறப்பட்டுள்ளது. இதேபோன்று நாளை முதல் இந்த ரயில் தாம்பரத்தில் புறப்பட்டு காரைக்கால் சென்றடையும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

News September 8, 2024

மயிலாடுதுறை வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்

image

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ரயில் வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி அன்று மட்டும் தஞ்சாவூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் மார்க்கமாக செல்லாது என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து அரியலூர், விருத்தாச்சலம் வழியாக கடலூர் சென்று அங்கிருந்து சென்னை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 8, 2024

குத்தாலம் அருகே 3 கடைகளுக்கு சீல்

image

குத்தாலம் அருகே இயங்கி வரும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை அவதாக குத்தாலம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடந்து மேலமங்கநல்லூர் ராஜேந்திரன் என்பவரது கடைக்கும், தேரழுந்தூரை மஜீத் சம்சுதீனின் மளிகை கடைக்கும், வாணாதிராஜபுரம் முகமது ரிஸ்வான் கடைலும் புகையிலை விற்பனை செய்யப்பட்டதால் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் குத்தாலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் கலந்து கொண்டார்.

News September 7, 2024

விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

image

2024 – 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பதிவு செய்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று அழைப்பு விடுத்துள்ளார். வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளது.

News September 7, 2024

மயிலாடுதுறை: தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து முடிக்கப்பட்ட பணிகள் குறித்து அங்கிருந்து அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் இராமர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News September 6, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக டாடா எலக்ட்ரானிக்ஸ் தனியார் நிறுவனத்திற்கு உற்பத்தி துறையில் பணிபுரிய அனுபவம் உள்ளவர்கள் செப்டம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடையே நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று பார்வையிட்டார். தொடர்ந்து புறநோயாளிகள் பதிவு அறையில் ஆய்வு செய்தார்‌. மேலும் அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் வசதிகள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News September 5, 2024

மயிலாடுதுறையில் இலவச கண் பரிசோதனை முகாம்

image

மயிலாடுதுறையில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் பல்வேறு தனியார் ஜுவல்லரிகள் இணைந்து நடத்தக்கூடிய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் வருகின்ற செப்டம்பர் 8 ஆம் தேதி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!