India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் இருந்து புறப்பட்டு கும்பகோணம் மயிலாடுதுறை வழியாக தாம்பரம் செல்லக்கூடிய முற்றிலும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இன்று திருச்சியில் இரவு 11 மணிக்கு புறப்பட உள்ளது. மேலும் தாம்பரத்திற்கு அதிகாலை 5.20 மணிக்கு செல்லக்கூடிய நிலையில் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில் பயணிகள் சங்கம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவெண்காடு அருகே கோணயாம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த நந்தகோபால் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். வீட்டில் அவரது மருமகள் வைதேகி மட்டும் இருந்த நிலையில் நள்ளிரவில் பக்கத்து அறை உடைக்கப்படும் சத்தம் கேட்டு நந்தகோபாலுக்கு தகவல் அளித்தார். அவர் வந்து பார்த்தபோது 8 பவுன் நகை மற்றும் 31ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருந்தது. புகாரின்படி திருவெண்காடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடியில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வந்து சேரும் ரயில் மற்றும் மாலை 5.15 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து மன்னார்குடி செல்லும் ஆகிய ரயில் செப்டம்பர் 15ஆம் தேதி நாளை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருவாரூரில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வந்து சேரும் ரயிலு ரத்து செய்யப்படுவதாக இன்று கூறப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை 9 மணிக்கு வந்து சேரும் ரயில் நாளை (செப்டம்பர் 15ஆம் தேதி) மட்டும் குத்தாலத்துடன் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 12 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் குத்தாலத்தில் இருந்து நாளை புறப்படும் என கூறப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 2 தேர்வு இன்று காலையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 24 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. மொத்தம் 8,293 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்த நிலையில் 6227 பேர் தேர்வு எழுதினர்.
மயிலாடுதுறை ஏ.வி.சி.கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப்-2 தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா வட்டாட்சியர் விஜயராணி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்குட்பட்ட மட்டக்குளம் பகுதியில் சமூகநலத்துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அமுதவல்லி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் நிறைவுற்ற பணிகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற கடைகள், மதுபானக்கூடங்கள் அனைத்தும் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் தற்காலிகமாக டாஸ்மாக் கடைகளை ஒருநாள் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குத்தாலம் வட்டாரம் கோமல் கிராமத்தில் முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கோமல் மாரியம்மன் கோவில் தெரு சாலை பணியை நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் கலெக்டர் ஷபீர் ஆலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோபனா புவனேஸ்வரி உள்ளிட்டோர் உள்ளனர்.
சென்னை விமான நிலைய டோல்கேட் ஊழியர்கள் அடாவடியாக நடந்து கொண்டதாக காங்கிரஸ் எம்பி சுதா தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த போது இரண்டாவது முறையாக தொல்லைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். எம்பிக்களுக்கு கட்டண விளக்கு உள்ள நிலையில் விமான நிலைய டோல்கேட் குழுவினர் தன்னை தடுத்ததாகவும் இந்த முறை நடவடிக்கை எடுக்காமல் விட மாட்டேன் எனவும் பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.