India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பாலம் கட்டுமான பணியில் விழுந்து கம்பி சொருகி இளைஞர் மணிகண்டன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன் தந்தை இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து நபர்கள் மீது இன்று பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே உதவி திட்ட மேலாளர் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் கட்டுமான பணியின் போது பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மணிகண்டன் வாகனத்துடன் விழுந்து கம்பி குத்தி உயிரிழந்த விவகாரத்தில் (டெப்டி ப்ராஜெக்ட் மேனேஜர்) ஓம் சக்தி கான்சன்ட்ரேஷன் ஒப்பந்த நிர்வாகத்தின் திட்ட உதவி மேலாளர் நாகராஜன் என்பவரை பெரம்பூர் போலீசார் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் FL1/FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் நாளை சுதந்திர தினம் அன்று தற்காலிகமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் நாளை விற்பனை இல்லாத நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மரகத பூஞ்சோலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, திமுக மாவட்ட கழக செயலாளர் நிவேதா முருகன் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி, மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் எலந்தகுடியில் பாலம் கட்டுமானத்திற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த இளைஞர் உயிரிழந்தார். பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த மணிகண்டன் தலையில் கம்பி குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலம் கட்டுமானப் பணி பாதுகாப்பு தடுப்புகள் இன்றி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம், கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வருகின்ற ஆகஸ்ட் 19 முதல் 24ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்கள், விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாகை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமையில் வருகிற 14-ம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.இது குறித்த அறிவிப்பினை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-1077 மற்றும் 7092255255 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார். மேலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. மேலும், கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் 293 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். இதனை தொடர்ந்து, பெறப்பட்ட மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில் ஏழ்மை நிலையில் உள்ள 500 பெண்களுக்கு ரூ.6 கோடியே 45 லட்சம் செலவில் நாட்டின கோழிக்குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் பயனாளி ஏழைப் பெண்ணாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.