Mayiladuthurai

News July 24, 2024

துப்பாக்கியால் சுட்டு விமானப்படை வீரர் தற்கொலை

image

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் இன்று (ஜூலை 24) காளிதாஸ் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மயிலாடுதுறையைச் சேர்ந்த காளிதாஸ்(55) என்பவர் பயிற்சி மையத்தின் 8 ஆவது கோபுரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் 3 தோட்டக்கள் பாய்ந்து நிகழ்விடத்திலேயே காளிதாஸ் உயிரிழந்தார்.

News July 24, 2024

TNPSC தேர்வுக்கு கட்டணமில்லா மாதிரி தேர்வுகள்

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி 2, 2A தேர்வு செப்., மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பயனடையும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.,3 முதல் சனி & ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கட்டணமில்லா மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்று பயனடையும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News July 23, 2024

மயிலாடுதுறையில் கொரோனா இல்லை டெங்குதான்

image

கொள்ளிடம் அருகே மாங்கனம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒருவர் சென்னையில் வேலைபார்த்து வரும் நிலையில் இன்று ஊர் திரும்பியுள்ளார். அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. கொள்ளிடம் வட்டார மருத்துவ குழுவினர் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததாக கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது டெங்கு அறிகுறிதான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

News July 23, 2024

கொள்ளிடம் அருகே ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி

image

கொள்ளிடம் அருகே மாங்கனம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒருவர் சென்னையில் வேலைபார்த்து வரும் நிலையில் இன்று ஊர் திரும்பியுள்ளார். அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. கொள்ளிடம் வட்டார மருத்துவ குழுவினர் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

News July 23, 2024

போக்குவரத்து துறை அமைச்சரிடம் மனு வழங்கல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் நியமிக்கப்படாததால் அலுவல் ரீதியாக சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே அரசு வழக்கறிஞர் இராம. செயோன் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை மனுவினை வழங்கினார்.

News July 23, 2024

ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்த நிலையில், புரளி என்பது தெரியவந்தது. தொடர்ந்து மிரட்டல் விடுத்த மயிலாடுதுறை நல்லத்துக்குடியை சேர்ந்த கணேசன் என்பவரை போலீசார் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 23, 2024

மயிலாடுதுறை பெயர் வந்த வரலாறு

image

18 ஆம் நூற்றாண்டு வரை “மயூரபுரம்” என அழைக்கப்பட்டு வந்த மயிலாடுதுறை அதன்பின்பு “மாயவரம்” என அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திருமுறைகளில் “மயிலாடுதுறை” என காணப்படுவதை சுட்டிக்காட்டி 1982 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனால் இப்பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு நாகையில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக செயல்பட்டு வருகின்றது.

News July 22, 2024

இன்று சென்னைக்கு செல்லும் அந்தோதயா ரயில் ரத்து

image

இன்று (22/7/ 24) நாகர்கோவிலில் இருந்து மயிலாடுதுறை வழியாக தாம்பரம் செல்லும்
அந்தோதயா ரயில் இன்று திங்கட்கிழமை கிடையாது. தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வழியாக நாகர்கோவில் செல்லும் ரயில் இன்று இரவு உண்டு. நாளை முதல்  ஜூலை 31ஆம் தேதி வரை அந்தோதயா ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

News July 22, 2024

மயிலாடுதுறையில் ISIS தீவிரவாத அமைப்பு ஆதரவாளர் கைது

image

மயிலாடுதுறையில் இருவர் தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட இக்காமா சாதிக் பாட்ஷா உள்ளிட்ட இருவர் ISIS தீவிரவாத அமைப்புக்கு நிதி மற்றும் ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

News July 21, 2024

மயிலாடுதுறை மக்களுக்கு ஆட்சியர் தகவல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை அறிந்தால் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தொலைபேசி எண் 1077 மற்றும் 7092255255 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். அடிப்படை பிரச்சனைகள் குறித்தும் புகாரளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!