India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
108 திவ்ய தேச தலங்களில் 26ஆவது திவ்ய தேசமான பரிமள ரங்கநாதர் பெருமாள் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தல புராணக் கதைகளைக் கொண்ட இக்கோயில் ஐந்து நிலை ராஜகோபுரங்களைக் கொண்டது. இந்த இராஜ கோபுரமானது 250 அடி நீளமும், 230 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதன் விமானம் வேத சக்ர விமானம் ஆகும். கருவறையில் 12 அடியில் பச்சை நிறத்தில் பெருமாள் சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.
மயிலாடுதுறையில் தனியார் பத்திரிகை நிறுவனம் சார்பில் மயிலாடுதுறை சிநேகிதிகளின் ஆஹா கொண்டாட்டம் என்ற நிகழ்வு நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வாக்கு என்னும் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோர்வின்றி பணியாற்றுவதற்காக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உள்ளிட்டோர் அவர்களின் இருப்பிடத்திற்கு நேற்று நேரில் சென்று உரையாடினர். பின்னர் அவர்களுடன் இணைந்து மதிய உணவு அருந்தினர்.
குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கும் பொதுமக்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி அனைத்து காவல் நிலையங்களிலும் தங்கள் சரகத்திலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நாட்டிற்கு பெருமை தேடித்தரும் சிறந்த சாகச வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.அதன்படி இந்திய அரசின் சார்பில் 23ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இவ்விருதிற்கான விண்ணப்பப்படிவம் https://awards.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும்பகுதி இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒட்டி இன்று மாலையில் கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வரும் நிலையில் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் காவல்துறை அறிவுறுத்தல்.
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் மற்றும் சீர்காழி தலைமை அஞ்சலகத்தில் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணிவரை ஆதார் புதியதாக எடுத்தல், முகவரி மாற்றம், கைரேகை பதிவு, பிறந்த தேதி திருத்தம், பெயர் திருத்தம், புதுப்பித்தல் உட்பட்ட ஆதார் அட்டையின் அனைத்து சேவைகளுக்கும் உரிய ஆவணத்துடன் வர வேண்டும் என மயிலாடுதுறை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு சான்றிதழின் அடிப்படையில் ஏற்கனவே பெயர் சேர்க்கப்பட்டு 5 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளுக்கு ஆதார் எண் பதிவேற்றம் செய்து கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் 30.6.2024-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே நீடூர் பகுதியில் மின்கம்பிகளுக்கு இடையே மரக்கிளைகள் உரசுவதால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து இருந்தனர். இதனிடையே இன்று மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் அதன் மீது படர்ந்திருந்த மரக்கிளைகளை முழுமையாக வெட்டி அகற்றினர்.
இந்திய அரசின் சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதுக்கு விண்ணப்பபடிவம் மற்றும் இதர விபரங்களை https://awards.gov.in/ என்ற இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் அதே இணையதள முகவரியில் 31.05.2024 -க்குள் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.