Mayiladuthurai

News June 22, 2024

கோயில் திருவிழாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

சீர்காழி அருகே புதுப்பட்டினம் காவல் சரக்கத்திற்குட்பட்ட கொட்டாய்மேடு கிராமத்தில் அருள்மிகு கோட்டைச்சாமி கோவில் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் காவல் ஆளுநர்கள் சிறப்பு காவல் படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 150 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

News June 22, 2024

மயிலாடுதுறை: மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்புக்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நாளை மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை சார்பில் காலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என தனி தனிபிரிவாக நடைபெறும் இப்போட்டியில் அனைவரும் பங்கேற்கும் படி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News June 21, 2024

மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தால் உடனடியாக ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 மற்றும் 7092255255 என்ற whatsapp எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

மயிலாடுதுறையில் வேலை வாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் துறையில் வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப் ஆகியவை இணைந்து நடத்தக்கூடிய குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. தொடர்ந்து காலை 9 மணிக்கு துவங்கி நடைபெற உள்ள இந்த முகாமில் இளைஞர்கள் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News June 20, 2024

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது

image

மயிலாடுதுறையில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சீர்காழி அருகே உமையாள்பதி கிராமம் கீழத் தெருவை சேர்ந்த ராமு மகன் ரஞ்சித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் இன்று சிறையில் அடைத்தனர்.

News June 20, 2024

கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக ஆலோசனை

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தஏ.பி.மகாபாரதி தலைமையில் அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News June 20, 2024

மயிலாடுதுறை அருகே போஸ்டரால் பரபரப்பு 

image

சீர்காழி அருகே சங்கிருப்பு கிராமத்தின் குறுக்கே சுமார் 750 ஏக்கர் விவசாய இடங்களுக்கு செல்வதற்கு வழி இல்லாமல் nh45ஏ நெடுஞ்சாலை அமைப்பது கண்டித்து சிதம்பரம் நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாவடி முக்கூட்டு பகுதியில் விவசாயிகள் மற்றும் கிராமவாசிகள் சார்பில் நாளை காலை 10 மணி அளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.இவை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News June 20, 2024

மயிலாடுதுறை அருகே ஒன்றிய குழு கூட்டம்

image

சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் ஒன்றிய தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை தலைவர் பானு சேகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது பகுதி குறைகள் மற்றும் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

News June 19, 2024

ஊக்கத்தொகை வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்

image

திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீன மேனிலைப் பள்ளியில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இன்று (19.06.2024) பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் அருட்பரிசு வழங்கினார்.

News June 19, 2024

மயிலாடுதுறை அருகே பல இடங்களில் மின்தடை 

image

சீர்காழி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்று இடி மின்னலுடன் சுமார் அரை மணி நேரம் மழைபெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின்கம்பிகளில் மரக்கிளைகள் தென்னை மட்டைகள் விழுந்து பாதிப்பு ஏற்பட்ட பாதிப்பால் சட்டநாதபுரம், கொள்ளிடம், மாங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஐந்து மணி நேரம் வரை மின்வினியோகம் தடைப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

error: Content is protected !!