Madurai

News December 8, 2024

அழகர்கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்

image

மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கருப்பணசாமி சன்னதியில் அரிவாள் காணிக்கை செலுத்தினார். நடிகர் சிவகார்த்திகேயனை கண்டதும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

News December 8, 2024

ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் விரைவில் முடிவு – திருமா

image

மதுரை : வெளிச்சநத்தம் விசிக கொடியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக விமானம் மூலம் இன்று மதுரை வந்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். செய்தியாளர்களிடம் பேசுகையில்,” ஆதவ் அர்ஜூனா கட்சி நலனுக்கு எதிராக பேசி வருவது குறித்து நிர்வாகிகளுடன் பேசியுள்ளேன்; ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் விரைவில் முடிவு செய்வோம்” என்று கூறினார்.

News December 8, 2024

அடுத்த மாநாடு மதுரையில் நடைபெறும் – ஓபிஎஸ் அறிவிப்பு

image

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்று பேசுகையில், ” நமது அடுத்த மாநாடு மதுரையில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்தப்படும் ” என்று தெரிவித்தார்.

News December 8, 2024

மதுரையில் விசிக கொடிகம்பத்திற்கு அனுமதி

image

மதுரை : வெளிச்சநத்தம் கிராமத்தில் 1996இல் 25 அடி உயர கொடிக் கம்பத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில் கொடி கம்பம் 45 அடியாக உயர்த்தப்பட்டு, இன்று திருமாவளவன் கொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.நேற்று விசிகவினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, தற்போது விசிக கொடிக் கம்பத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

News December 7, 2024

மதுரையில் விசிக கொடியேற்ற தடை

image

மதுரை வெளிச்சநத்தத்தில் 1996 இல் 25 அடி உயரம் கொண்ட விசிக கொடியை திருமாவளவன் ஏற்றி வைத்தார். இக்கிராமத்தில் இருந்த 25 அடி உயர கொடி கம்பியை கட்சி நிர்வாகிகள் 45 அடி உயரமாக உயர்த்தினர். இந்நிலையில் நாளை திருமாவளவன் இக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்ற உள்ள நிலையில் இதற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.இதனால் அக்கிராமத்தில் விசிக வினர் குவிந்து வரும் நிலையில் அக்கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News December 7, 2024

மதுரைக்கு இரவு நேரத்தில் புதிய விமான சேவை

image

மதுரை விமான நிலையத்தில் இருந்து டிசம்பர் 20ஆம் தேதி முதல் இண்டிகோ விமான நிறுவனம் சென்னை மதுரைக்கு இரவு நேரத்தில் கூடுதலாக விமானத்தை இயக்க உள்ளது. இதையடுத்து, பயணிகளின் கோரிக்கையை ஏற்று இரவு விமான சேவை அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியான தருணம்” என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News December 7, 2024

கஞ்சா கடத்தியவருக்கு 4 ஆண்டுகள் சிறை

image

திண்டுக்கல் கானாவாடு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தியது தொடர்பாக 2019 ஆம் ஆண்டு பனைப்பட்டியை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்த 12 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு இன்று போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஹரிகுமார் மாயகிருஷ்ணனுக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

News December 7, 2024

முதல்வர் மருந்தகம் அமைக்க அவகாசம் நீட்டிப்பு 

image

தமிழகத்தில் 1000 முதல்வர் மருந்தகங்கள் துவக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி. பார்ம், டி.பார்ம் சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். டிச.5 இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிச.10 வரை அவகாசம் நீட்டிக்கப் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இணைப்பதிவாளர் சதீஷ்குமார் கூறியுள்ளார்.

News December 7, 2024

தகராறில் கும்பலாக வந்து கணவனை வெட்டிய மனைவி

image

பேரையூர் அருகே வடகரை பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(35). இவர் புதுப்பட்டியில் அரசு மறுவாழ்வு மையத்தில் வார்டனாக உள்ளார். இவருக்கும் அவரது மனைவி ராஜலட்சுமி(28)க்கும் தகராறு இருக்கவே, நேற்று முத்துப்பாண்டி, அவர் தந்தை பாண்டி ஆகியோரை ராஜலட்சுமி, ஈஸ்வரி, சங்கர், சரவணன் உட்பட 9 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டி, உருட்டு கட்டையால் தாக்கினர். பேரையூர் போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News December 7, 2024

டிசம்பர் 20 முதல் மதுரை – சென்னை இரவு விமான சேவை

image

மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என இந்திய விமான நிலையங்களின் ஆணையத் தலைவர் எம். சுரேஷ், (அக்.1) அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் முதற்கட்டமாக வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் இரவு நேரத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படும் என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!