India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை வெளிச்சநத்தம் கிராமத்தில் சமீபத்தில் அரசின் அனுமதியின்றி 45 அடி உயரத்தில் கொடி கம்பம் நட்டு, பின் தற்காலிக அனுமதியுடன் கொடியேற்றினர். இந்த விவகாரம் தொடர்பாக முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காத 4 வருவாய் அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பணி இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதனால் வருவாய் அலுவலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் இன்று (09.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தியது தொடர்பாக ஜெகதீசன், சிவன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்த வழக்கு போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். அதன்படி இருவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
திண்டுக்கல் – திருச்சி இடையே பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வண்டி எண் 16128 குருவாயூர் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் டிசம்பர் மாதம் 12,14,17,21,26,28,31, மற்றும் ஜனவரி மாதம் 3,4,6,7,8,9,11 ஆகிய தேதிகளிலும், மறு மார்க்கமாக வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் டிசம்பர் 14 இல் மட்டும் மதுரை, சோழவந்தான் வழிதடத்தில் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் வருவதால் வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. இது குறித்து அதிகாரிகள் கூறும் போது: மதுரை தெப்பக்குளத்தில் கடந்த ஆண்டு போல படகு சவாரி விடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அனைத்து படகுகளும் சரி பார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சவாரி செய்து மகிழ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை, திருப்பரங்குன்றம் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே ரூட் செட் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஒரு மாத காலம் இலவச போட்டோ, வீடியோ பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பவர்களுக்கு வயது 18 முதல் 45குள் இருக்க வேண்டும். உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 17ஆம் தேதிக்குள் 9626246671 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.
மதுரை மாவட்ட இரவு ரோந்து பணி (டிச;8) காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களும் வெளியீடப்பட்டடுள்ளது. இதில் பேரையூர், ஊமச்சிகுளம், திருமங்கலம், மேலூர், சமயநல்லூர், உசிலம்பட்டி போன்ற மதுரை மாநகர பகுதிகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகளின் விவரம் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த நடிகர் சூரி அம்மன் உணவகம் நடத்தி வருகிறார். மதுரைக்கு சுவாமி தரிசனத்திற்காக வருகை தந்த நடிகர் சிவகார்த்திகேயன் தெப்பக்குளம் பகுதியில் உள்ள நடிகர் சூரியன் அம்மன் உணவகத்தில் மதிய உணவருந்திய பிறகு, நடிகர் சூரியின் சகோதரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தனது நண்பர் சூரியன் கடைக்கு வந்து உணவு வேண்டியது மகிழ்ச்சி என அவரது சகோதரர்களிடம் தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்ற 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும் முதற்கட்டமாக ரூ.1118.35 கோடிக்கு முதற்கட்ட கட்டுமான பணிகள் துவக்கம் எனவும் ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகி உள்ளது.22 மே 2024 அன்று கட்டுமானம் தொடங்குவதற்கு கடிதம் வழங்கப்பட்டு 33 மாதங்களில் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை வடகரை தென்கரையை இணைக்கும் ஆல்பர்ட் விக்டோரியா பாலத்திற்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை வைகை மக்கள் இயக்கம் சார்பில் இயக்கத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பாலத்தின் அருகே கேக் வெட்டி கொண்டாடினர். இந்த பாலம் மக்களின் பயன்பாட்டிற்காக 139 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதனை சிதலமடையாமல் சீரமைக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.