India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நிலம் மென்பொருளில் விவசாயிகள் விபரப் பதிவேடு (Farmer Registry)தொடர்பான தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால் இன்று (டிச.28) காலை 10 மணி முதல் 31ஆம் தேதி மாலை 4 மணி வரை இணையவழி பட்டா மாறுதல் (https://tamilnilam.tn.gov.in/Revenue / https://eservices.tn.gov.in/eservicesnew/index.html)சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் டிச.4ம் தேதி புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில். சமூக வலைதளங்கிளான எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் சிக்னல் என்ற மொபைல் செயலியில் குழுக்களை ஆரம்பித்து குழந்தைகள் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். போலீஸ் விசாரணையில் மதுரையை சேர்ந்த நவீன்ஷங்கர் என்பவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி; சாதி பெயரில் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்க்க கூடாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி கடந்தாண்டு சாதி பெயரில் காளைகள் அவிழ்க்கப்படவில்லை. அதே போல இந்த ஆண்டும் ஜல்லிகட்டு போட்டிகளில் சாதி பெயரை குறிப்பிட்டு காளைகள் அவிழ்க்கப்படாது என தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த குருமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கும்பகோணம் தொகுதி திமுக எம்எல்ஏ அன்பழகனின் பிறந்த நாளை முன்னிட்டு நகராட்சிப் பகுதியில் பொது சாலைகள் மற்றும் நடைபாதைகளில் பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் முன் அனுமதி பெறாமல் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ளது என்று மனு செய்திருந்தார். வழக்கில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே அதிகாரி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாம்பன் அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில் பாலம் 100 சதவீதம் தயாராக உள்ளது. பழைய பாலத்தைப் போலவே புதிய ரெயில் பாலமும் 100 ஆண்டை கடந்தும் நிற்கும். பாலத்தில் 75 கிலோமீட்டர் வேகத்தில் ரெயில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
மதுரையில் ஜல்லிகட்டு ஆலோசனை கூட்டத்தில் விழாக் கமிட்டியினர் பேசுகையில், ‘ஜல்லிக்கட்டு என்பது வீர விளையாட்டு. அதில் கொம்புகளுக்கு கவச உறை என்பது ஏற்க முடியாது’ என்றனர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ‘அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.’ என்றார். பின்னர் ஆட்சியர், அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு விழாக் கமிட்டியினரின் கருத்துகளை தெரிவிக்குமாறு கூறினார்.
ஜல்லிக்கட்டில் பங்கு பெறும் வீரர்கள் மற்றும் காளைகளை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு விழாவுக்கு முன் அனுமதி பெற வேண்டும். 8 அடிக்கு தடுப்பு வேலி அமைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காளைகள், வீரர்களுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவராத்திரியை முன்னிட்டு மதுரையில் இருந்து சென்னை வழியாக நவ ஜோதிர்லிங்க மஹா யாத்திரை சிறப்பு ரயில் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை வழியாக இயக்கப்படுகிறது. 12 நாட்கள் சிறப்பு யாத்திரையில் ஒருவருக்கு 3 ஆம் வகுப்பு ஏ.சி பெட்டியில் 35,500 ரூபாய் கட்டணம். ஏ.சி இல்லாத பெட்டியில் 25,700 ரூபாய் கட்டணம் என தகவல்.
மதுரை மாவட்டத்தில் இன்று (டிச.27) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டத்தில் பணி புரியும்போது காலமான சத்துணவுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 12 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று (டிச.27) வழங்கினார். இந்த நிகழ்வின் போது மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.