Madurai

News December 29, 2024

மதுரை 5 DSPக்கு பதவி உயர்வு

image

மதுரை உதவி ஆணையர், காவல் துணைக் கண்காணிப்பாளர் 5 போ் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு. தெற்குவாசல் உதவி ஆணையர் ரமேஷ், கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையா் உதயகுமாா், பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு குப்புசாமி, ஊழல் தடுப்பு துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன், மனித உரிமைகள் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் ஆகியோர் பதவி உயா்வு பெற்றனா். டிஜிபி சங்கர் ஜுவால் உத்தரவு.

News December 29, 2024

மதுரை மாநகர் பகுதியில் மின் தடை அறிவிப்பு

image

மதுரை மாநகர் உட்பட்ட தெப்பக்குளம் வண்டியூர் பசுமலை ஆனையூர் எல்லிஸ் நகர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு காரணமாக காலை முதல் மாலை வரை மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு மாற்று ஏற்பாடு செய்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

News December 29, 2024

போலி வேலை வாய்ப்பு செய்திகளை நம்ப வேண்டாம் – எச்சரிக்கை

image

மதுரை மாநகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த சில நாட்களாகவே பகுதி நேர வேலை மற்றும் முழு நேர வேலை என்ற பெயரில் போலியான லிங்க் அனுப்பி அதன் மூலம் தங்களுடைய தொலைபேசியில் இருக்கக்கூடிய தகவல்கள் திருடி நூதன முறையில் மிரட்டப்பட்டு வருகிறார்கள் ஆகையால் போலி வேலை வாய்ப்பு செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News December 29, 2024

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (டிச.28) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 28, 2024

தமிழ்நாடு முழுவதும் 400 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி

image

தமிழ்நாடு முழுவதும் 18 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, எருது விடுதல், மஞ்சு விரட்டு, வடமாடு என பல பெயர்களில் மாடு பிடிக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஜனவரி முதல் மே மாதம் வரை நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒருங்கிணைக்கும் வகையில் www.jallikattu.tn.gov.in என்ற இணையதளத்தை அரசு தொடங்கியிருக்கிறது. பொங்கலை முன்னிட்டு 400 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்.

News December 28, 2024

டாஸ்மாக் கடைகளை அதிகமாக்கி என்ன பயன்? – ஐகோர்ட்

image

தேனி மாவட்டம் பூதிபுரம் பகுதியில் அரசு மதுபான கடை திறக்க தடை விதிக்க கோரிய மனுவில் மது குறைக்கும் வழியை பாருங்கள். அதைவிடுத்து கடைகளை அதிகமாக்கி என்ன பயன்? மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது மூலை முடுக்கெல்லாம் மதுக்கடைகள், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் மதுக்கடைகள் இருக்கிறது. கடைகளை அரசு விளம்பரம் செய்வதில் என்ன பயன்? என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

News December 28, 2024

மதுரை: சமூக ஆர்வலர்கள் கலந்துரையாடல் நிகழ்வுக்கு அழைப்பு

image

மதுரை மாவட்டத்தில் நீர் நிலை பாதுகாப்பு மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள பேராசிரியர்கள், ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள், இயற்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து மூன்றாவது ஆண்டாக காந்தி அருங்காட்சியகத்தில் வரும் 31ஆம் தேதி மாலை 3 மணிக்கு சந்திப்பு நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News December 28, 2024

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிகழ்வு – ஆட்சியர் அறிவிப்பு

image

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் மனித கழிவுகளை மனிதர்களே கையால் அகற்றும் நிகழ்வுகள் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. ஏதேனும் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் 15 நாட்களுக்குள் தங்கள் கருத்துக்களை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News December 28, 2024

மதுரை மாநகராட்சியில் 42 தீர்மானங்கள் நிறைவேற்றம்

image

மதுரை மாநகராட்சி மாவட்ட கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ரூ. 313.93 கோடி கூடுதலாக ஒதுக்குவது, போக்குவரத்துக்கு இடையூறாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள நக்கீரர் தோரணவாயில், கே.கே.நகரில் உள்ள தந்தை பெரியார் நினைவு தோரணவாயிலை அகற்றி வேறு தோரண வாயில் அமைப்பது என்பன உள்பட 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல்

News December 28, 2024

சாட்டையால் அடித்துக் கொண்ட பாஜக நிர்வாகி

image

மதுரை : சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீதி கேட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று கோவையில் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அதேபோல், மதுரை தவிட்டு சந்தையில், பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் துரை பாலமுருகனும் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.

error: Content is protected !!