India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடுகோட்டை மீனாட்சி நகரை சேர்ந்த பேபி கமலம் என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 25ஆம் தேதி பழனி பாதயாத்திரை சென்று இருந்தார். பாதயாத்திரை முடித்து இன்று (டிச.30) காலை சொந்த ஊருக்கு திரும்பிய பேபி கமலம் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 32 பவுன் நகை, 2 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. அவர் அளித்த புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் விசாரணை.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மதுரை திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடியில் மதுரை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரையைச் சேர்ந்த நடிகர் சூரி மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மன் உணவகம் என்ற பெயரில் உணவகம் தொடங்கப்பட்ட நிலையில் அந்த உணவகம் சுகாதார சீர்கேடாக உணவுப் பொருட்கள் தயரிக்க படுவதாகவும் மேலும் உணவகம் கூடுதலாக இடங்களை ஆக்கிரமித்து உள்ளதாக மதுரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார் இதனால் நடிகர் சூரிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது
மதுரை மாநகரில் கோரிப்பாளையம்- தேவா் சிலை சந்திப்பிலிருந்து செல்லூா், ஆரப்பாளையம், கூடல்புதூா், திண்டுக்கல் சாலை வழியாகச் செல்லும் வாகனங்கள் மீனாட்சி கல்லூரி சாலை வழியாகச் சென்று வைகை வடகரை சாலையை அடைந்து கபடி ரவுண்டானா வழியாகச் சென்று வந்தன. தற்போது மீனாட்சி கல்லூரி சாலையில் நடைபெற்று வரும் உயா்மட்ட மேம்பாலப் பணியின் காரணமாக இந்தச் இன்று முதல் சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.செல்லூர் 60 அடி சாலை பகுதியில் மதுரை மாநகர மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட் ஈடுபட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்ட வாரியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், மதுரையில் ஜனவரி 18 மற்றும் 19ஆம் தேதிகளில் அலங்காநல்லூரில் உள்ள கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற உள்ளது. இதில் ஒன்பது நாடுகளை சேர்ந்த ராட்சத பலூன்கள் இடம் பெற உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல விரும்பும் வெளி மாவட்ட, மாநில பக்தர்கள் மதுரை நகரில் அனைத்து சோதனை சாவடிகளிலும், பிற முக்கிய சாலைகளிலும், நகருக்குள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லக்கூடிய ஒவ்வொரு பாதையின் நுழைவு வாயிலும் QR கோடு அமைக்கப்பட்டுள்ளது. இதை வாகன ஓட்டிகள் ஸ்கேன் செய்து அருகிலுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்தி, பின் கோவிலுக்கு செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
செகந்திராபாத் – ராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில்களின் சேவையை மேலும் மூன்று மாத காலத்திற்கு நீட்டித்து தென் மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி செகந்திராபாத் – இராமநாதபுரம் சிறப்பு ரயில் (07695) ஜனவரி 1, 8, 15, 22, 29, பிப்ரவரி 5,12,19,26, மார்ச் 5, 12, 19, 26 ஆகிய புதன்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 09.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.45 மணிக்கு சென்றடையும் என தகவல்.
ஹைதராபாத் கச்சிக்குடா – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி கச்சிக்குடாவில் இருந்து ஜனவரி 6 முதல் மார்ச் 31 வரை திங்கட்கிழமைகளில் இரவு 08.50 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க் கிழமை இரவு 08.45 மணிக்கு மதுரை வந்து சேரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் கச்சிக்குடா – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி கச்சிக்குடாவில் இருந்து ஜனவரி 3 முதல் மார்ச் 28 வரை இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.