Madurai

News January 1, 2025

மதுரையில் புகையிலை விற்பனை செய்த 175 கடைகளுக்கு சீல்

image

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக மதுரை மாநகர் காவல்துறை சார்பாக கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் சுமார் 175 கடைகள் மூடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. கஞ்சா புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 1, 2025

மதுரையில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்

image

மதுரை மாநகர் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற பல்வேறு கொலை, கற்பழிப்பு, போக்சோ உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக குற்றப்பத்திரிகை காவல்துறை சார்பாக 60 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

News January 1, 2025

மதுரையில் விரைவில் நாய்பிடி வாகனங்கள் வாங்க திட்டம்

image

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களுக்குக் கருத்தடை ஊசி போடுவதை அதிகரிக்கவும் செல்லூர், வெள்ளைக்கல் பகுதிகளில் உள்ள விலங்குகள் கருத்தடை மையங்களை மறுசீரமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், நாய்பிடி வாகனங்களை அதிகரிப்பதற்கான முன்மொழிவும் விரைவில் அளிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 1, 2025

சர்வதேச விமான பயிற்சிக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

தாட்கோ மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் விமான பயணம், முன்பதிவு போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழை வழங்கி வேலைவாய்ப்பு பெறலாம். இப்பயிற்சியில் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா இன்று (ஜன.01) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 1, 2025

மதுரை மேயரின் உறவினர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

image

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தின் சகோதரர் பொன் விஜய். இவர் தேனி மாவட்டம் கூடலூரில் வசித்து வருகிறார். இவருக்கும் இவர் மனைவி இலக்கியாவுக்கும் குடும்பத் தகராறு இருந்த நிலையில், பொன் விஜய் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார் இலக்கியா. இதைத் தொடர்ந்து அவசர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவர் இன்று (ஜன.01) அனுமதிக்கப்பட்டார்.

News January 1, 2025

மதுயைில் ரயில் கால அட்டவணை இன்று முதல் மாற்றம்

image

மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:
மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் மதுரையில் இருந்து மாலை 4:10 மணிக்கு பதிலாக மாலை 3:.45 மணிக்கும், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் மதுரை — சென்னை மும்முறை சேவை விரைவு ரயில் மதுரையில் இருந்து இரவு 8:50 மணிக்கு பதிலாக இரவு 8:45 மணிக்கும் புறப்படும். மேலும் பல்வேறு ரயில்களின் நேரம் மாற்றபட்டுள்ளது.

News January 1, 2025

கொலை குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

image

சிலைமான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2016இல் தாக்கலான கொலை வழக்கில் குற்றவாளிகளான மணிமாறன் (31), மணிகண்டன்(35), புல்லட் மணி(36), சரவணன்(45), அஜித் குமார்(33) ஆகியோர் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், மாவட்ட மகிளா நீதிமன்றம் ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

News January 1, 2025

மதுரை உட்பட 17 சார் பதிவாளர்கள பணியிட மாற்றம்

image

தமிழக முழுவதும் 5க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ள நிலையில் 17 சார் பதிவாளர்களை பணியிடம் மாற்றம் செய்து ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பணியாற்றிய மாலினி ஜெயஸ்ரீ என்ற அலுவலரை மதுரை தெற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தின் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News December 31, 2024

திருநகரை சேர்ந்த பள்ளி மாணவன் மாயம் 

image

மதுரை திருநகர் பகுதியில் பள்ளி மாணவன் மாயம்,சிறுவனின் பெற்றோர்கள் அருகில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் சிறுவன் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சிறுவன் குறித்த தகவல் கிடைத்தால் 8754936046 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுக்குமாறு காவல்துறையினர் அறிவிப்பு. மாணவனின் நண்பர்கள், உறவினர்களிடத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

News December 31, 2024

மதுரை மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கை உயர்கிறது

image

மதுரை மாநகராட்சியில் 100 ல் இருந்து 120 வார்டுகளாக அதிகரிக்கப்பதற்கான அனைத்து பணிகளும் முடிவுற்று விரிவாக்கம் வரைபடம் வெளியாகியுள்ளது. பரவை, கருப்பாயூரணி, ஒத்தக்கடை, நரசிங்கம், காதக்கிணறு, செட்டிகுளம், கோவில்பாப்பாகுடி, ஆலாத்துார், பேச்சிகுளம், விரகனுார், நாகமலை புதுக்கோட்டை, கரடிபட்டி, ஏற்குடி அச்சம்பத்து, துவரிமான், பெருங்குடி (பகுதி), அரும்பனுார் (பகுதி), கொடிக்குளம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!