India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை செல்லத்தம்மன் கோயிலில் பாஜக மகளிர் அணி பெண்களுக்கு நீதி கேட்டு பேரணி நடைபெற்றது. இதில் மிளகாய் இடித்து கண்ணகி அம்மனுக்கு பூசும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ரஷ்யாவை சேர்ந்த கேத்ரினா என்ற பெண் ஒருவர் பாஜக மகளிர் அணி போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக தெரிவித்து அவரும் உடன் சேர்ந்து மிளகாய் இடித்தார்.
மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியில் பாஜக மகளிர் அணி சார்பில் நடைபெறும் நீதி கேட்கும் பேரணியில் கலந்து கொள்வதற்காக பாஜக தலைவர் நடிகை குஷ்பு தற்போது மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரணி மறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் ஏன் பாதுகாப்பில் உள்ளனர் என கேள்வி எழுப்பினார்.
மதுரை ஊமச்சிகுளத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முனீஸ்வரன். பல ஆண்டாக ஆட்டோ ஓட்டுநர் பணி செய்கிறார். இவர் தன்னுடைய இறப்புக்கு பின் தன்னுடைய உடலை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க அரசு மருத்துவமனையில் உடல் தானம் விண்ணப்பத்தை வழங்கியுள்ளார். ஆட்டோ ஓட்டுனர் செயல் அனைத்து தரப்பினரிடம் பாராட்டை பெற்றுள்ளது. இந்நிலையில் அவர் முளைசாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்ததாக பொய்யான தகவல் பரவியது.
மதுரை மாவட்ட அரிசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
மதுரை மாவட்ட அரசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
மதுரை மாவட்டத்தின் வடக்கு திமுக சார்பாக தென்னிந்திய அளவிலான ஏ லெவல் கபடி போட்டி நடைபெற இருப்பதாக அறிவித்து வெளியிட்டுள்ளது. வருகின்ற ஜனவரி 7, 8, 9 தேதிகளில் வண்டியூர் பகுதியில் இருக்கக்கூடிய திடலில் நடைபெறுவதாகவும் முதல் பரிசு 2 லட்ச ரூபாயும், இரண்டாம் பரிசு 1,50,000 ரூபாயும் மூன்றாம் பரிசு 1லட்ச ரூபாயும், நான்காம் பரிசு 50 ஆயிரம் ரூபாயும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேலூர், உசிலம்பட்டி, சோழவந்தான், திருமங்கலம், பேரையூர் ஆகிய காவல் சரகங்களில் இன்று( 02-01-2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. தங்கள் உதவிக்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளது.
சுதந்திரப் போராட்டத் வீரர் கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (ஜன.3) காலை மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது முழு உருவ சிலைக்கு தலைமை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான, செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உட்பட அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டியன் கட்டபொம்மன் 265 வது பிறந்தநாள் நாளை கொண்டாட உள்ள நிலையில், மதுரை பெரியார் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள அவருடைய உருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைவரும் வரவேண்டும் என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற ரயிலில் மதுரை ரயில் நிலையத்திற்கு அசோக் என்ற பெயரில் அட்டை பெட்டிகள் மற்றும் சாக்குமூட்டைகள் வந்துள்ளன. இதில்240 கிலோ குட்கா கடத்திவரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Sorry, no posts matched your criteria.