India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் இன்று (08.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஜனவரி 9 அன்று மதுரையிலிருந்து மாலை 05.50 மணிக்கு தாமதமாக புறப்படும். நாகர்கோவில் சென்னை வந்தே பாரத் ரயில் ஜனவரி 9 அன்று நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு காலதாமதமாக புறப்படும். திருச்செந்தூர் வாஞ்சி மணியாச்சி ரயில் ஜனவரி 10 அன்று திருச்செந்தூரில் இருந்து மாலை 03.40 மணிக்கு தாமதமாக புறப்படும்.
மதுரை மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் புதூர் சரவணன் என்பவர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு டாஸ்மார்க் பாரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என மனுவினை, முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன் சேர்த்து பாஜகவினர் வழங்கினர்.எங்களது கொள்கையும் பூரண மது விலக்குதான் ஆனால் அரசு அதை நோக்கி நகரவில்லை முதல்வர் படத்தை வையுங்கள் என்றனர்.
ராஜபாளையம் செவல்பட்டியை சேர்ந்த விக்னேஷ் பாண்டி (22),யுவராஜ் (19) கல்லூரி மாணவர்கள் இருவரும் டூவீலரில் ராஜபாளையத்தில் இருந்து கோயம்புத்தூர் சென்றனர். வழியில் சமயநல்லூர் பாலத்தில் முன்பாக சென்ற வேனின் பின்புறம் டூ வீலர் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி யுவராஜ் பலியானார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த 10 உப கோவில்களில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் மாதம் ஒரு முறை எண்ணப்படும். அதன்படி டிசம்பர் மாதத்திற்கான அனைத்து கோவில்களின் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. கோவிலில் இணை கமிஷனர் கிருஷ்ணன், அறங்காவலர்கள் தலைமையில் நடந்த இந்த பணியில் ரூ 1 கோடியே 65 லட்சத்து 50 ஆயிரத்து 107 ரூபாயும் 358 கிராம் தங்கமும் 839 கிராம் வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றது.
2024-25ஆம் ஆண்டிற்கான திருநங்கையர் தினம் ஏப்.15 கொண்டாடப்பட உள்ளது. தங்கள் சொந்த முயற்சியால் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில், ‘முன்மாதிரி விருது’ ரூ.1 லட்சம் காசோலை மற்றும் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது. விபரங்களை தமிழக அரசின் விருதுகள் awards.in.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பிப்.10க்குள் அனுப்ப வேண்டும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
பசும்பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்கவும், ஆண்டு தோறும் பாலுக்கு விலை நிர்ணயம், 50 சதவீதம் மானியத்தில் தீவனம், ஆவின் நிர்வாகம் பொங்கலுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கறவை மாடுகளுடன் இலவசமாக பால் வழங்கி ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் அலங்காநல்லூரில் 5786, அவனியாபுரத்தில் 2026,பாலமேட்டில் 4820 காளைகளும் அவிழ்த்து விடப்பட உள்ளது. மேலும் அலங்காநல்லூரில் 1698, அவனியாபுரத்தில் 1735, பாலமேட்டில் 1914 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என கூறி இன்று மேலூரில் நடைபெற்ற நடைப்பயண போராட்டத்தில் கலந்து கொண்ட போராட்டக்காரர்களுக்கு அரிட்டாபட்டி மற்றும் வல்லாளப்பட்டியில் உணவு தயாரிக்கப்பட்டு, குடிநீர் பாட்டில்களுடன் வழங்கப்பட்டது. இதனால் முதியோர் மற்றும் பெண்கள் போராட்டத்தை முடித்து உணவு அருந்தி மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க madurai.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய (ஜன6)நேற்று மாலை 5 மணி முதல் (ஜன.7)இன்று மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பதிவுக்காலம் முடிவடைந்த பின்பு இன்று மாலை 6 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா செய்தியாளர்களிடம் ஆதாரப்பூர்வமாக எத்தனை காளைகள் பங்கேற்க உள்ளது என்பதை தெரிவிக்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.