India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கட்டுபாடுளுடன் நடைபெற்று வரும் நிலையில் காளைகள் மீது பவுடர் மற்றும் மஞ்சள்பொடி பூசி வரும் காளைகள் வெற்றிபெற்றாலும் காளைகளுக்கு பரிசுகள் கிடையாது- மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு. பவுடர் பூசியபடி வரும் காளைகள் அடுத்தாண்டில் பங்கேற்க அனுமதியளிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட வரும் நிலையில் திடீரென்று உள்ளே செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கட்டுக்கடங்காமல் உள்ளே வர நுழைந்ததால் காவல்துறையினருக்கும் மாடுபிடி வீரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாடுபிடி வீரர்கள் ஆம்புலன்சுக்கு வழி விடாமல் வழிமறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
மதுரை: கடந்த 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த கார்த்தி, இந்த ஆண்டும் முன்னிலை வகித்து வருகிறார்.
தற்போது வரை 4 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், 8 காளைகளை அடக்கி முன்னிலையில் உள்ளார் அவனியாபுரம் கார்த்தி. இறுதிச் சுற்றுக்கும் தேர்வாகியுள்ளார்.
மதுரை எம்பி வெங்கடேசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்; சென்னை, மதுரை, திருச்சி பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஜன. 13,16,17,18 தேதியில் 6 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதை மாற்ற கோரி கேந்திரிய வித்யாலயா மண்டல துணை ஆணையாளர் மணிவண்ணனுக்கு கடிதம் எழுதினேன். தேர்வுகளை தவிர்க்குமாறு பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பதில் அனுப்பிய அவருக்கு நன்றி என்றார்.
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுவதை ஒட்டி ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடு பிடி வீரர்களுக்கு முதல் பரிசாக 8 லட்சம் மதிப்புள்ள நிசான் நிறுவனத்தின் கார் பரிசாக முதல்வர் சார்பாக அளிக்கப்பட உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மதுரை அலங்காநல்லூரில் மூலதன மானியத் திட்டத்தில் 1.49 கோடியில் கட்டப்பட்ட டாக்டர் அம்பேத்கர் பஸ் ஸ்டாண்டை அமைச்சர் இன்று (ஜன.13) நேரு திறந்து வைத்தார். அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் சங்கீதா, எம்எல்ஏ வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் நேரு பேசுகையில், ரூ 20 கோடியே 50 லட்சத்தில் பணிகள் நடந்துள்ளன. சாலைகள், வடிகால்கள், பாலம், குடிநீர் பணிகள் முக்கியமானவை என்றார்.
மதுரையில் முன்னாள் கவுன்சிலர்& பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்எஸ்ஷா மீது பதினைந்து வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை தந்ததாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பாஜக நிர்வாகி எம்எஸ்ஷா மற்றும் சிறுமியின் தாய் உள்ளிடோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் புதிதாகக் கண்டறியப்பட்ட எச்எம்பிவி தொற்றால் பலர் பாதிக்கப்பட்டனர்.சென்னை, சேலம் ஆகிய இடங்களில் இருவர் இந்தத் தொற்றால். பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.இதுதொடர்பாக ராஜாஜி மருத்துவமனை முதன்மையர் அருள் சுந்தரேஷ்குமார் நேற்று கூறுகையில், ” “தற்போது வரை எச்எம்பிவி தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் யாரும் கண்டறியப்படவில்லை. இந்தத் தொற்றால் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை” என்று கூறினார்.
அவனியாபுரத்தில் நாளை நடக்கவுள்ள ஜல்லிகட்டை முன்னிட்டு மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம். அவனியாபுரம் பைபாஸ் ரோடு பெரியார் சிலை சந்திப்பிலிருந்து அவனியாபுரம் நகருக்குள் செல்லவும் அவனியாபுரம் அம்பேத்கர் சிலை சந்திப்பு வழியாக திருப்பரங்குன்றம் செல்லவும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.ஹர்சிதா மருத்துவமனை-மருதுபாண்டியர் சிலை சந்திப்பிலிருந்து அய்யனார் கோயில் வழியாக அவனியாபுரம் செல்ல அனுமதி இல்லை.
மதுரை மாவட்டத்தில் இன்று (12.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.