India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகரில் இன்று (21.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை பகிரவும்.
மதுரை மாவட்டத்தில் இன்று (21.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் வரும் 26ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு 420 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து மனுவாகவோ நேரடியாகவோ விவாதிக்க அறிவுறுத்தல்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு சேகரிக்கும் இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் முருகன் (46) என்பவரை மாடு மார்பில் குத்தியதில் பலத்த காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார், இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாதாந்திர விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டம் வரும் 24ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே மாவட்டம் முழுவதிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாகவோ நேரடியாகவோ தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12,024 பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று ஆண்டுகளில் 26 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளதாக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதி என்ன ஆனது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொங்கல் பண்டிகை மது விற்பனையில் ரூ.179 கோடி விற்பனையுடன் திருச்சி மாவட்டம் முதலிடத்திலும், சேலம் மாவட்டம் ரூ.151.50 கோடி விற்பனையுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. எப்போதும் முதலிடத்தைப் பிடிக்கும் மதுரை, இந்தாண்டில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.149.55 கோடி மட்டுமே விற்பனையாகி உள்ளதாகடாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மதுரையில் கால்நடை கணக்கெடுப்பு பணி மாதிரி வரை திட்ட பணிகளை கூடுதல் இயக்குனர் நவநீதகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மதுரை மாடக்குளம் முத்துப்பட்டியில் கால்நடை கணக்கெடுப்பு பணி விவரங்களை அவர் கேட்டிருந்தார். ஊமச்சிகுளம் திருப்பாலையில் மாதிரி வரைவு திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார். கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் மண்டல இணை சுப்பையன் துணை இயக்குனர் நந்தகோபால் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டத்தின் மாநகர பகுதியிலான தெற்குவாசல் திருப்பரங்குன்றம் திலகர்திடல் செல்லூர் அண்ணா நகர் ஆகிய காவல் சரங்களின் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் வெளியிடப்பட்டுள்ளது. தங்கள் உதவிக்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளது.
மதுரை காந்தி மியூசியத்தில் ஜனவரி 31 காலை 10:30 முதல் மாலை 4:30 வரை சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. துணி துவைக்கும், பாத்திரம் விளக்கும், பறை துடைக்கும் திரவங்கள், ஊறுகாய் இயற்கை பானங்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 9865798420ல் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.