India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை கோட்டத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்களில் இருந்து ஜன.10 முதல் 13 வரை தென் மாவட்டங்களுக்கு 467 பஸ்கள், பொங்கல் விடுமுறைக்குப் பின் ஜன.15 முதல் 20 வரை தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 605 பஸ்கள் இயக்கப்பட்டன. ஜன.20ம் தேதி ஒரே நாளில் மதுரை கோட்ட அரசு பஸ்கள் ரூ.4.49 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. இது கடந்த பத்தாண்டுகளில் அதிக வசூல் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை : வேப்பங்குளத்தைச் சேர்ந்த மக்கள் விடுதலைக் கட்சி நிர்வாகி காளையன் மர்மமாக உயிரிழந்ததை அடுத்து விசாரணை கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, காளையன் மர்ம மரணம் தொடர்பாக, பட்டியலினத்தவர்க்கான தேசிய ஆணைய இயக்குனர் ரவிவர்மா புதன்கிழமை மதுரை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கள்ளிக்குடி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மலையின் புனிதத்தை காக்கும் வகையில், அங்கு உயிர்ப்பலி கொடுத்து சமைத்து சாப்பிட, போலீசார் தடைவிதித்துள்ள நிலையில், ராமநாதபுரம் எம்.பி.,யும், வக்புபோர்டு வாரிய தலைவருமான நவாஸ் கனியுடன் வந்தவர்கள், மலைப் படிக்கட்டில் பிரியாணி சாப்பிட்டனர் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.இதற்கிடையே மலை மீதுள்ள சமணர் குகையில் பச்சை பெயின்ட் அடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இன்று(22.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட செய்தி குறிப்பில்: 26.01.2025 (குடியரசு தினம்) அன்று மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், 2025-26ஆம் நிதி ஆண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் குறித்து விவாதிக்கப்படவுள்ளதால் மக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்
மதுரை மாவட்டம், பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் வருகின்ற 25.012025 அன்று குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்யலாம் என ஆட்சியர் அறிவிப்பு *ஷேர்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின்போது டங்ஸ்டன் சுரங்க திட்டம் குறித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இடம் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி வல்லாளப்பட்டி விவசாயிகள் சுரங்கம் எதிர்ப்பு குறித்த தெரிவித்ததைத் அடுத்து நாளை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு நல்ல செய்தியாக வெளியிடப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஜன 24 காலை நடக்கிறது. இதில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன 10ம் வகுப்பு முதல் முதல் முதுநிலை பட்டப்படிப்பு பட்டயம் ஐடிஐ படித்த இளைஞர்கள் பங்கேற்கலாம் www.tnprivatejops.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்லாம். ஜன 24 காலை 10 மணிக்கு கே புதூர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என துணை இயக்குனர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கல்லூரியில் புதன்கிழமை காலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், அங்கிருந்து காா் மூலமாக மதுரைக்கு வருகிறார் காமராஜா் சாலையில் உள்ள வா்த்தக சங்கப் பவள விழா காலை 10.30 மணியளவில் நடைபெறும் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தின் 100-ஆவது ஆண்டு நிறைவு விழாவில் அவா் பங்கேற்றுப் பேசுகிறாா். பிற்பகல் 1.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
மதுரை: சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மகிழ்ச்சிகரமான தகவல் நாளை மத்தியானத்திற்கு மேல் வர வாய்ப்பு இருக்கிறது” என்று நேற்று கூறினார். இதன் மூலம், இன்று மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஆணையை முழுமையாக ரத்து செய்து ஆணை வெளியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.