Madurai

News February 3, 2025

மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் பொறுப்பேற்பு

image

மதுரை மாநகர காவல் துறையில் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளராக இது வரை பணியாற்றி வந்த பெத்துராஜ் காவல் உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் இன்று (பிப்.03) காலை காவல் உதவி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News February 3, 2025

மதுரையில் சமபந்தியில் பங்கேற்ற அமைச்சர்

image

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தியில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். சம பந்தியில் கலந்து கொண்ட அவர் பொதுமக்களோடு அமர்ந்து உணவு அருந்தினார். இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அங்கு வழங்கினார். இந்நிகழ்வில் ஆட்சியர் சங்கீதா மற்றும் பூமிநாதன் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றனர்.

News February 3, 2025

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

image

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் திருப்பரங்குன்றத்தில் ஆர்பாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் மதுரையில் 144 தடை உத்தரவு, நாளை இந்து முன்னணி நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி நீதிபதி தனபால் முன்பு அவசர முறையீடு செய்தனர்.அப்போது நீதிபதி, இதனை அவசர வழக்காக விசாரணை செய்ய முடியாது. வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவுறுத்தினார்.

News February 3, 2025

மதுரை அருகே காவலர் கொடூர கொலை

image

எழுமலை அருகே டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் காவலர் சிவா 35. இவருக்கு பொன்மணி என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் பொன்மணி சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். மீண்டும் திருமணம் செய்து கொண்ட சிவா முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையை அவரது பாட்டியிடமிருந்து அழைத்து வந்ததால் ஆத்திரமடைந்த முதல் மனைவியின் சகோதரர் அர்ஜுனன் 2வது மனைவி கண்முன்னே காவலர் சிவாவை குத்தி கொலை செய்தார்.

News February 3, 2025

மதுரையில் 144 தடை உத்தரவு

image

திருப்பரங்குன்றம் விவகராம் தொடர்பாக இந்து முன்னணியின் போராட்ட அறிவிப்பு இன்றும், நாளையும் அறிவித்திருந்த நிலையில் மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று காலை முதல் நாளை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் போராட்டங்கள் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News February 2, 2025

போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு

image

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்கா விவகாரத்தை முன்வைத்து பிப்.4 அன்று திருப்பரங்குன்றம் பகுதியில் இந்து முன்னணி ஆர்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

News February 2, 2025

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவிக்க நீதிமன்றம் அனுமதி

image

கோவில்பாப்பாக்குடியைச் ” மதுரை மாநகராட்சியுடன், இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஞானசேகரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், மதுரை மாநகராட்சியுடன், கோவில்பாப்பாக்குடியை இணைக்க எதிர்ப்பு தெரிவிக்க, மனுதாரருக்கு, அனுமதி வழங்கியதுடன், அதை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டனர்.

News February 2, 2025

பிப்ரவரி மாதம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு

image

தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்று ஜல்லிக்கட்டு.அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இந்த ஆண்டு மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் 12ம்தேதி புதன்கிழமை காலை 7:00 மணி முதல் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தலைமையில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

News February 2, 2025

போலி பெண் டாக்டர் கைது

image

மதுரை அரசரடி டிபி ரோடு சிட்டலாட்சி நகரில் எரோசா மருத்துவமையம் உள்ளது.
இதன் உரிமையாளர் இஸ்ரேஸ் எபினேசர் இங்கு டாக்டர் சிவா என்பவர் பணிபுரிவதாக அறிவிப்பு பலகை உள்ள நிலையில் மருத்துவம் படிக்காமல் மீனா என்பவர் சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது. 10ம் வகுப்பு படித்துவிட்டு அனுபவத்தின் அடிப்படையில் மருத்துவம் பார்த்தது தெரிந்தது மீனாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 1, 2025

நாளை பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்

image

தமிழ்நாடு முழுவதும் நாளை (பிப்.2) பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என பத்திரப்பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், மதுரையில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் நாளை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள மக்கள் விரும்புவதால் அலுவலகங்கள் இயங்கும் எனவும் ஆவணப் பதிவுக்கு, விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!