Madurai

News February 5, 2025

குடியரசு தினவிழா பங்கேற்ற கலைஞர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

image

டெல்லியில் கடந்த ஜன.26ம் தேதி நடந்த கலை நிகழ்ச்சிகளில் மதுரை மரக்காலாட்ட கலைஞர் கோவிந்தராஜ் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான கிராமிய கலைஞர்கள் பங்கேற்றனர். இவர்கள் இந்தியா கேட் பகுதியில் தலையில் கரகம் உள்ளிட்ட, நமது கலைநிகழ்ச்சிகளுடன் சென்று பார்வையாளர்களை கவர்ந்தனர். டெல்லி குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் முடித்து, அனைவரும் மதுரை திரும்பினர். அவர்களை மதுரை கலெக்டர் சங்கீதா வாழ்த்தி பாராட்டினார்.

News February 5, 2025

தொழில் முனைவோர்களுக்கு அறிய வாய்ப்பு

image

கிராமப்புற தொழில் முனைவோருக்கு தொழில் தொடர்பான சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் சிக்கந்தர் சாவடி வேளாண் உணவு வர்த்தக மையத்தில் பிப். 7 காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பான் கார்டு, டான், உத்யோக சான்றிதழ், உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ், ஜி.எஸ்.டி., டிரேட் மார்க், காப்புரிமை தாக்கல், ஆயுஷ் சான்றிதழ் பதிவு, கடன் வசதி சேவைகள் பெறலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

News February 5, 2025

திமுக பிரமுகரை கொலை செய்த மூவருக்கு மாவுக்கட்டு

image

டி.கல்லுப்பட்டியை சேர்ந்த திமுக பிரமுகர் முருகேசன் கடந்த 1-ந்தேதி மங்கம்மாள்பட்டி சுடுகாட்டில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதில் ராஜசேகரன் (33), தர்மதுரை (29), பார்த்திபன் (31), கருப்பசாமி (34), விஜய் (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கொலை நடந்த இடத்திற்கு அவர்களை அழைத்து சென்றபோது தப்பி ஓட முயன்று விஜய், ராஜசேகரன், பார்த்திபன் மூவரும் கீழே விழுந்ததில் கை, கால் முறிவு ஏற்பட்டது.

News February 5, 2025

மதுரையில் கண்காணிப்பு அதிகாரி நியமனம்

image

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், மதுரை மாவட்டத்திற்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான கண்காணிப்பு அதிகாரியாக தனியார் பள்ளிகள் இணை இயக்குநர் ஆஞ்சலோ இருதயசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உறுதி செய்துள்ளார்.

News February 5, 2025

2.60 லட்சம் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

image

மதுரை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பிப். 14 வரை மருத்துவ நிலையங்களில் கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 60 ஆயிரம் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இணை இயக்குநர் சுப்பையன் தெரிவித்தார்.வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் கோழி வளர்ப்போர் முகாம்களில் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தல்.

News February 5, 2025

தாம்பரம் – மதுரை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

மதுரையில் இருந்து தாம்பரத்துக்கு வாரம் இருமுறை அதிவிரைவு ரயில் (எண் 22624) இயக்கப்படுகிறது. இந்த ரயில் 4 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 7 பெட்டிகள், இரு பொதுப் பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பிப். 6 முதல் மாா்ச் 20 வரை கூடுதலாக இரு மூன்றடுக்கு ஏசி வகுப்பு பெட்டிகளும், இரு பொது வகுப்பு பெட்டிகளும் கொண்டு இயக்கப்படவுள்ளன என தெற்கு ரயில்வே செய்தி வெளியிட்டுள்ளது.

News February 5, 2025

கஞ்சா வழக்கில் தந்தை மகன் உட்பட 4 பேருக்கு 10 ஆண்டு சிறை

image

மதுரை கரடிகல்லைச் சேர்ந்த அழகு பாண்டி. இவரது மகன் முத்துப்பாண்டி, சேதுபதி, ராஜ பிரபு ஆகியோர் 3 டூவீலர்களில் 70 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த போது 2021ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், தந்தை, மகன் உட்பட 4 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹர குமார் இன்று உத்தரவிட்டார்.

News February 5, 2025

5000 மேற்பட்டோர் பழங்காநத்தம் போராட்டத்தில் பங்கேற்பு

image

திருப்பரங்குன்றம் கோயில் முன்பாக திரண்ட முருக பக்தர்கள், இந்து அமைப்பினர் 1000-க்கும் மேற்பட்டோர் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என கோஷங்களை எழுப்பி பின்பு பழங்காநத்தம் ரவுண்டானாவை நோக்கி சென்றனர். போராட்டத்தில் பல்வேறு மாவட்டத்திலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கணிசமான அளவில் பெண்கள் பங்கேற்றனர். இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, இராம ஸ்ரீனிவாசன் பங்கேற்றனர்.

News February 4, 2025

திமுக அரசுக்கு கன்னத்தில் வலுவான அடி – எச்.ராஜா

image

மதுரையில் எச்.ராஜா பேட்டியளித்தார். அதில், ஒவ்வொரு போராட்டத்திற்கும் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் கூட அமைச்சர் மூர்த்தி அறிஞர் அண்ணாவிற்கு மாலை அணிவிக்கலாம். ஆனால் என் அப்பன் முருகனுக்கு வழிபாடு நடத்தக் கூடாதா என கேள்வி எழுப்பினார்.மேலும்,ஐகோர்ட் அனுமதி அளித்திருப்பது அரசுக்கு கன்னத்தில் வலுவான அடி கொடுத்திருப்பதாக கூறினார்.

News February 4, 2025

மதுரையை கலக்கும் பெண் அதிகாரிகள்

image

மதுரையில் மீனாட்சி ஆட்சி என்று கூறுவார்கள். அதற்கு ஏற்றார் போல், மாநகராட்சி முதல் பெண் கமிஷனராக சித்ரா விஜயன் பொறுப்பேற்றார். கலெக்டராக சங்கீதா, மேயராக இந்திராணி, ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் மோனிகா ராணா, செயற் பொறியாளர் இந்துமதி, ஆர்டிஓ.,க்களாக ஷாலினி, ஜெயந்தி, தாசில்தார்களாக மீனாட்சி, செந்தாமரை, கல்வி அலுவலர் ரேணுகா, துணை ஆணையர் அனிதா என பெண் அதிகாரிகள் மதுரையை கலக்கி வருகின்றனர்.

error: Content is protected !!