India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிப். 11தைப்பூசம் நாளை முன்னிட்டு பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மதுரை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்கள் மூலம் பிப். 9முதல் 12 வரை 990 சிறப்பு பஸ்கள் மதுரை, திண்டுக்கல், தேனி, காரைக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, பொன்னமராவதி, திருச்சியில் இருந்து பழநிக்கும், பழநியில் இருந்து ஊர் திரும்ப ஏதுவாகவும் பஸ்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளில் வள்ளலார் தினத்தை முன்னிட்டு வரும் 11-ந் தேதி அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உள்ளிட்டவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.*அசைவ விரும்பிகளுக்கு பகிர்ந்து உஷார் படுத்தவும்
மதுரை மாநகர காவல் துறையில் பணியாற்றியவர் மோகன் குமார்(31). வீட்டின் அருகே மரம் வெட்டும் போது தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்றிரவு அவர் மூளை சாவடைந்ததை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர் மனைவி ஒப்புக்கொண்டார். அவரது 2 சிறுநீரகங்கள், இதயம்,கல்லீரல், தோல், கருவிழிகள் தானமாக அளிக்கப்பட்டது.அரசு சார்பில் காவலருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார். அதில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு ஆட்சியரை பலிகாடாக ஆக்கி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் புகழை கெடுக்கும் வண்ணம் திட்டமிட்டே சதி செயல்கள் நடைபெறுகிறது. அமைதி பேச்சுவார்த்தையில் அதிமுக சார்பில் யார் கலந்து கொண்டார் என ஆட்சியர் தெரிவிக்கவில்லை. யாரோ ஒருத்தர் சொன்னார் என அறிக்கையில் அதிமுக பெயர் இடம் பெற்றுள்ளது என பேசினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதில், “சட்டம் ஒழுங்கு மக்கள் பிரச்சினையில் அதிமுக பிரதிநிதிகளை அழைக்காமல் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், அறிக்கையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லியில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் (BASA) மதுரை விமான நிலையத்தைச் சேர்ப்பதற்கும், அதன் சர்வதேச அந்தஸ்தை அறிவிப்பதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று (பிப்.06) நேரில் சந்தித்து கடிதம் வழங்கியுள்ளார். அதற்கு அவர் சாதமகான கருத்தை தெரிவித்ததாக எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் இன்று(பிப். 06) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் பெரும் சர்ச்சையாகி வருகின்றது. இந்த நிலையில், நேற்று இந்து முன்னணி, பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து இன்று (பிப்.05) சமூக வலைதளங்கள் முழுவதும் ‘வாங்க பாய் இது நம்ம மலை’ என்று முருகன் மாற்று மதத்தினரை கையைப் பிடித்து அழைத்துச் செல்வது போல் மயில் மீது ஏறி செல்வது போல் புகைப்படம் தீயாகப் பரவி வருகிறது.
மதுரை எம்பி வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி எழுப்பட்டுள்ள பிரச்சனை முருகப் பெருமான் சம்பந்தப்பட்டதோ, சிக்கந்தர் தர்ஹா சம்பந்தப்பட்டதோ அல்ல. முழுக்க முழுக்க பாஜகவின் வெறுப்பு அரசியல் சம்பந்தப்பட்டது. ஆர்எஸ்எஸ், பாஜக ஒன்றாக, நன்றாக இருக்கும் ஊரில் மத வெறியை கிளப்பி தங்களின் வாக்கு வங்கியை பலப்படுத்த இதில் இறங்கியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு தனது மகளின் நினைவாக ரூ.7 கோடி மதிப்புள்ள 1.52 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆயி என்ற பூரணம் அம்மாள், மேலும் 91 சென்ட் நிலத்தை பள்ளிக்காக இன்று (பிப்.04) தானமாக வழங்கியுள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆயி பூரணம்மாளை பாராட்டி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.