Madurai

News February 11, 2025

39 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்

image

மதுரை : சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 39 வழக்கறிஞர்களும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடுவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உரிமையில் வழக்குகளில் வாதாட 16 வழக்கறிஞர்களும், குற்றவியல் வழக்குகளில் வாதாட 7 வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News February 11, 2025

ஜல்லிக்கட்டு பார்வையிட சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

image

அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் மைதானத்தில், ஜல்லிக்கட்டு பார்வையிட வரும் பார்வையாளர்கள் வசதிக்காக பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை மைதானத்திற்கு வரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் அரங்கில் அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 11, 2025

கீழக்கரை மைதானத்தில் ஜல்லிக்கட்டு இன்று தொடக்கம்

image

அலங்காநல்லூர் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் இன்று (பிப். 11) ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைக்கிறார். இதில் 1,000 காளைகளை களமிறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணியளவில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்குகிறது. காளைகளுக்கும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

News February 11, 2025

தலைமை காவலர்களாக பதவி உயர்வு – ஆணையர் பாராட்டு

image

மதுரை மாநகரில் முதல்நிலை காவலர்களாக இருந்து தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார். தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 15 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

News February 10, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

மதுரை மாவட்டத்தில் இன்று (பிப்.10) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 10, 2025

மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

image

மதுரையில் தைப்பூச நாளில் தென் மாவட்ட முருக பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து 990 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மதுரை கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 10, 2025

தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை – பழனிக்கு சிறப்பு ரயில்

image

பழனி தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை – பழனி இடையே பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 08.45 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு பழனி சென்று சேரும். மறு மார்க்கத்தில் பழனியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 05.45 மணிக்கு மதுரை வந்து சேரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 10, 2025

ஒத்தகடை அருகே கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்

image

மதுரை ஒத்தகடை பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண் மீது அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் அந்தப் பெண் தூக்கி வீசப்பட்டார். விபத்தில் படுகாயமடைந்த முத்துலட்சுமிக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் ஓட்டுநரை ஒத்தக்கடை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

News February 10, 2025

மதுரையில் இளைஞர் வெட்டி படுகொலை

image

திடீர்நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் அருகே வசிக்கும் ராமசாமி என்பவரது மகன் ராமசுப்பிரமணி ஆம்னி பேருந்து முகவராக பணிபுரிந்து வந்தார். நேற்று (பிப்.09) இரவு மர்ம நபர்கள் சிலர் அவரை ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். கொலை சம்பவம் குறித்து திடீர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 10, 2025

மதுரையில் மல்லிகை ரூ.3000 க்கு விற்பனை 

image

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தைப்பூச விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி மல்லிகை பூ கிலோ ரூ.3000, மெட்ராஸ் மல்லி ரூ.1000, பிச்சி ரூ.1500, முல்லை ரூ.1500, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.1000, ரோஸ் ரூ.200 க்கு விற்கப்படுகிறது. பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை தொடர்ந்து இதே விலையில் நீடிக்கும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!