India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை திருமங்கலம் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 22 முட்டை தூய மல்லி நெல் ஏலத்திற்கு வந்துள்ளதாக வேளாண் விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். மேலும் இந்த ஆவாரம் பூவை மொத்த விற்பனையில் வாங்க விரும்புவோர் கீழ்க்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம் 9025152075/9600802823.
தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறாதவரை, பணியில் சேர்க்க தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய மேல்முறையீடு வழக்கில் இன்று தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும். சிபிஎஸ்இ கல்வியில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள் என்றும் காட்டமாக தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம் 25.3.2025 முதல் 28.3.2025 வரை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் 25.03.05 முதல் 27.03.205 வரையிலான மூன்று நாட்கள் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5 ல் நாளை (மார்ச் 11) செவ்வாய்க்கிழமை மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். எனவே இந்த மண்டலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவன அட்டவணையில் மதுரை – ஐதராபாத் சேவை நேரம் மார்ச்30 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் ஐதராபாத்தில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8:05 மணிக்கு மதுரை வருகிறது. மீண்டும் மதுரையில் இருந்து காலை 8:55க்கு புறப்பட்டு காலை 10:40 ஐதராபாத் சேரும். இந்த சேவை மார்ச் 30 முதல் ஐதராபாத்தில் இருந்து அதிகாலை 5:35க்கும், மதுரையில் இருந்து மதியம் 2:55 மணிக்கு புறப்படும்.#SHARE#
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை வாராந்திர மனுநீதி நாளை முன்னிட்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் மருத்துவம், காவல், வருவாய், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான தீர்வு நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் அருகே தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கீழக்கரையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 993 மாடுகள் களம் இறக்கப்பட்டன. அதில் 46 பேர் காயமடைந்தனர். 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்ட போலீசாரால் பயன்படுத்தப்பட்டு 5 நான்கு சக்கர வாகனம், 4 டூவீலர்கள் மார்ச் 15ம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது. நாளை மார்ச்.10 முதல் 14ம் தேதி வரை ஆயுதப்படை மைதானத்தில் வாகனங்களை பார்வையிடலாம்.ஏலம் எடுக்க விரும்புவோர் 15 அன்று ஆதாருடன் ரூ.5000 முன்பனம் செலுத்தி பெயர் பதிய வேண்டும். ரொம்ப நாளா கார்,பைக் வாங்கணும்னு சொல்றா உங்க நண்பருக்கு இத SHARE பன்னுங்க.
மதுரையை ஆண்ட மீனாட்சி என்ற பெருமைக்குரிய “தூங்கா நகரான” மதுரையில் தற்போது முக்கிய மக்கள் சேவை பணியில் மகளிர் பெருமளவில் அங்கம் வகித்த வருவது இதுவே முதல் முறையாகும். மாவட்ட ஆட்சியராக சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி, மாநகராட்சி ஆணையராக சித்ரா விஜயன், மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ருக்மணி பழனிவேல்ராஜன் மக்கள் சேவையில் உள்ளனர். ்
மதுரை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 9 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. மார்ச்.15 அன்று காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் மார்ச்.10 அன்று காலை 10 மணி முதல் மார்ச்.14 மாலை 5 மணி வரை மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.