Madurai

News February 15, 2025

கள்ளழகர் கோவில் ஸ்தல வரலாறு தெரியுமா?

image

மதுரை கள்ளழகர் கோவிலின் தனிச் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.? வாங்க சொல்றேன்.. சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்று அழைக்கப்படும் இத்தலம் இளங்கோவதியரையர் என்னும் மன்னரால் கட்டப்பட்டது. இத்தலத்தில் தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு எரிந்து கொண்டே இருப்பது கோவிலின் தனிச்சிறப்பு. இங்கு காணிக்கையாக கிடைக்கும் தானியங்களை மாவாக்கி தோசை சுட்டு பிரசாதமாக தரப்படுகிறது. Share It.

News February 15, 2025

SJ சூர்யா படத்தில் மீண்டும் இணையும் டிக்டாக் பிரபலம்

image

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா நடித்து வரும் ஒவ்வொரு படங்களின் கதாபாத்திரங்களும் பேசு பொருளாகி வரக்கூடிய வேலையில், மதுரையைச் சேர்ந்த டிக் டாக் பிரபலம் உதயா சுமதி ஏற்கனவே கானல் என்னும் திரைப்படத்தில் அவரோடு இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News February 15, 2025

மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

image

மதுரை மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றிய சக்தி வேல், சென்னை மாநகர போக்குவரத்து கழக பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அதன்படி சென்னையில் மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழக பொதுமேலாளராக பணியாற்றிய ராகவேந்திரன் மதுரை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மதுரை மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி ஏற்று கொண்டார். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

News February 15, 2025

மதுரை மாவட்டத்திற்கு புதிய நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நியமனம்!!!

image

மதுரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக இருந்த ரவிக்குமார் பணி மாறுதல் காரணமாக சென்ற காரணத்தால் மதுரை மாவட்ட முத்திரைத்தாள் தனி ஆட்சியர் முத்து முருகேசன் பாண்டியனை புதிய அலுவலராக நியமனம் செய்து தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் 28 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 15, 2025

“வங்கிகள் ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது”: ஐகோர்ட் 

image

கடனை செலுத்திய பிறகும் சொத்து அடமான பத்திரத்தை தர மறுப்பதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. “வங்கிகள் ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது” உரிய கடனை செலுத்திய பின்பும் ஆவணங்களை வழங்க மறுத்தது கண்டிக்கத்தக்கது என கூறி, வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமாருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து தலைமை நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

News February 15, 2025

கடன் வாங்கும்போது கவனம் தேவை; காவல்துறை எச்சரிக்கை!!

image

மதுரையில் உள்ள பொது மக்களுக்கு மாநகர காவல் துறை சார்பாக ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைந்த வட்டியில் வீட்டு கடன் மற்றும் தனி நபர் கடன் வழங்குகிறோம் என இணையத்தில் வரும் போலியான விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம்.கடன் வாங்குபவர்கள் நேரடியாக வங்கிக்கு சென்று கடன் பெற்று பயன்பெற வேண்டுமென காவல்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 15, 2025

மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் 9,943 நாய்களுக்கு கருத்தடை

image

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: “மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. என மனு தக்கல் செய்து இருந்தார்மாநகராட்சி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் 9943 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News February 15, 2025

திமுக அரசு துரோகம் செய்தது – ஆர்.பி.உதயக்குமார்

image

மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசு துரோகம் செய்தது. சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி எடுத்து வைத்த வாதத்தின் அடிப்படையில் தான் டங்ஸ்டன் திட்டம் ரத்தானது. டங்ஸ்டன் விவகாரத்தில் இரட்டை வேடத்தை தோலுரித்து காட்டியவர் எடப்பாடி பழனிசாமி. ராஜினாமா செய்கிறேன் என ஸ்டாலினை பேச வைத்தவர் எடப்பாடியார் என பேசினார்.

News February 15, 2025

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

image

மதுரையில் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், அதிமுகவின் அணிகள் தமிழக மக்களை விரைவில் சந்திக்க தயாராகிவிட்டார்கள். அதற்கென ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. மக்களை சமூக வலைதளத்திலும் சந்தித்து உண்மையை நியாயத்தை எதார்த்தத்தை சொல்லி வருகின்றனர் என தெரிவித்தார்.

News February 14, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (பிப்.14) இரவு புறநகர் பகுதிகளான மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான் ஆகிய காவல் சரகங்களில் இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!