India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு மானியம் பெற விவசாயிகளுக்கு தனி அடையாள எண் பதிவு செய்யப்படுவதால் தோட்டப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் உடனே பதிவு செய்ய வேண்டும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரபா தெரிவித்துள்ளார். தங்கள் கிராமத்தில் நியமிக்கப்பட்ட தோட்டக்கலை, வேளாண் அலுவலர்கள், சமுதாய வளப் பணியாளர்களிடம் ஆதார், கம்ப்யூட்டர், ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும் என்றார். *ஷேர்
மதுரை : செல்வ மகள் சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்கான சிறப்பு முகாம் தென் மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் வருகிற மார்ச்.13, 20 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. தென் மண்டலத்தில் இந்த திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு தொடங்கி இருப்பவர்களின் எண்ணிக்கை ரூ.7.86 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், சேமிப்பு வைப்பு தொகை ரூ. 5,219 கோடியை கடந்துள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பாக பொதுத்துறை அயல்நாடு வேலை வாய்ப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அரேபியாவில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.03.2025. மதுரை மட்டுமில்லாமல் தமிழக முழுவதும் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விவரம் அறிய<
மதுரை: இந்திய மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு சார்பில் 2023-24 ம் ஆண்டுக்கான தேசிய பொது பேருந்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 19 விருதுகள் கிடைத்தன. இதில், மதுரை போக்குவரத்து கோட்டம் பேருந்துகளின் டயர் செயல்திறன், எரிபொருள் செயல்திறன், வாகனப் பயன்பாடு ஆகியவற்றில் சிறந்த செயல்பாடுகளுக்காக 4 விருதுகளை வென்றது. இந்த விருது உங்கள் கருத்து *ஷேர் பண்ணுங்க
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் சார்பாக பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில்,அச்சம் எதற்கு உங்கள் அழைப்பின் அவசியமும், அவசரமும் நாங்கள் அறிவோம், பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களை உணர்ந்தால் உடனே அழையுங்கள் காவல் உதவி எண் 100 மற்றும் பெண்கள் உதவி எண் 181 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்
மதுரை, வைகை வடகரையில் யானைக்கல் மேம்பாலத்தின் இறக்கம், மேளக்காரத்தெரு பகுதியில் பாலத்தின் மேல்தளத்தில் கட்டுமானம், சாலைப்பணிகள் நடக்க உள்ளது. இதையொட்டி இன்று(மார்ச்.12) இரவு 10:00 மணி முதல் நாளை(மார்ச்.13) காலை 6:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யானைக்கல் பாலம் வழி எம்.எம்.லாட்ஜ் சந்திப்புக்கு செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. *ஷேர்
குடும்பத்தில் ஓயாத பிரச்சனை, வாழ்க்கை துணையுடன் பிரச்சனை, திருமணம் தள்ளிப் போவது, குழந்தை பாக்கியம் கிடைப்பதில் பிரச்சனைகள் இருந்தால் மதுரையில் உள்ள மிகவும் பிரபலமான இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலுக்கு சென்று வழிபட்டால் இந்த அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது .
கிரிண்டர்’ (grindr)என்ற ஓரின சேர்க்கையாளர்கள் நட்புக்கான செயலி மூலம் தர்மபுரி குணசேகரனிடம் 34, சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்த முனீஸ்வரன் 32, பழகி மதுரையில் நேரில் சந்தித்துள்ளனர். இருவரும் புனலூர் ரயிலில் சென்றபோது குணசேகரனுக்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்து 2 தங்க மோதிரங்கள், அலைபேசி ஆகியவற்றை முனீஸ்வரன் கொள்ளையடித்து தப்பியுள்ளார். இச்செயலி மூலம் இதுபோன்ற மோசடி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல்,தமிழக முதலமைச்சர் உத்தரவுப்படி இணையவழியில் விண்ணப்பிக்கலாம். என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதன் மூலம் நில உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.இந்த <
திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட பெரிய கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ராதேவி. இவருக்கு மணிகண்டன் மற்றும் தருண் என்ற 2 செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளனர். அவர்களது மருத்துவ செலவிற்காக பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் கடந்தாரர்கள் தர குறைவாக பேசுவதால் தனது குழந்தைகளை கருணை கொலை செய்யுமாறு தாய் ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.