Madurai

News February 16, 2025

பறவைகள் கணக்கெடுப்பில் பொதுமக்கள் பங்கேற்கலாம்

image

மதுரை சர்வதேச அளவிலான பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வு 4 நாட்கள் நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் இன்று மாலை 4 மணிக்கு இதில் இலவசமாக பங்கேற்று பலவகை பறவைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பில் இலவசமாக பங்கேற்கலாம் என மதுரை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் பேராசிரியர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

News February 16, 2025

சலுகை வழங்க உறவினர்களிடம் ‘ஜிபே’ வசூல்; காவலர் சஸ்பெண்ட்

image

மதுரை சிறையில் கைதிகளுக்கு சலுகைகள் வழங்க அவர்களின் உறவினர்கள் மூலம் சிலரது ‘ஜிபே’ மூலம் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை சிறை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட சிறைகளிலும் சில காவலர்களும் வசூலில் ஈடுபட்டுள்ளனர். தேனி காவலர் ஒருவர் கைதிக்கு அலைபேசி கொடுத்து உறவினர்களிடம் பேச உதவியதற்கு ‘ஜிபே’ மூலம் ரூ.5ஆயிரம் பெற்றுள்ளார். இதன் காரணமாக அவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

News February 16, 2025

ஜல்லிக்கட்டு போட்டியில் 15 பேர் காயம்

image

அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட காளைகள் பங்கேற்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மூன்று சுற்றுகள் முடிவில் 15 பேர் காளைகள் முட்டி காயம் அடைந்துள்ளனர். இதில் 2 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெறுகின்றனர்.

News February 16, 2025

மதுரை: “நூல் அரும்புகள்” – குழந்தைகள் புத்தக விமர்சனம்

image

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில்(16.02.2025 ) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு, குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்வில் ,மேற்கண்ட பள்ளி குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய கலைஞர் நூற்றாண்டு நூலகம் குழந்தைகளுக்கு அழைப்பு.

News February 16, 2025

மதுரையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

image

அனைத்து வங்கிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஊழியர்கள் பற்றாக்குறை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கே.கே.நகர் சென்ட்ரல் வங்கி முன்பாக மாலைநேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார்மயமாவதை தடுக்க வேண்டும், வார வேலை நாட்களை 5ஆக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மதுரை நகர வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடுகளை செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 16, 2025

மதுரை நெல்கொள்முதல் நிலையங்களில் வேலைவாய்ப்பு

image

நுகர்பொருள் வாணிப கழகத்தின் மதுரை மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்காலிக பருவகால பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, பில் கிளார்க், உதவியாளர், வாட்ச்மேன் என 450 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் துணை ஆட்சியர்/ மண்டல மேலாளர், த.நா.நு.பொ.வா.கழகம் என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பதை அஞ்சல் அனுப்பவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2025 *ஷேர்

News February 16, 2025

மதுரை மாவட்டத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி

image

மதுரை திமுக வடக்கு மாவட்டம் சார்பாக சோழவந்தான் சட்டமன்ற தொகுதி சார்பாக மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா நாளை (பிப்.16) அலங்காநல்லூர் கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவை வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைக்கிறார். இந்த மாதத்தில் நடைபெறும் மூன்றாவது ஜல்லிக்கட்டு போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

News February 16, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (பிப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 15, 2025

மதுரை காவலர்களை டிஜிபி நேரில் அழைத்து பாராட்டு

image

மதுரை மாநகர காவல்துறையைச் சேர்ந்த இ1 கோ.புதூர் (குற்றம்) காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலா மற்றும் தலைமைக் காவலர் செந்தில் பாண்டியன் வழிப்பறி கொள்ளையனை விரட்டி பிடித்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

News February 15, 2025

லோடு இறக்கும் போது தொழிலாளி மயங்கி விழுந்து பலி

image

மதுரை ஆண்­டார்கொட்­டா­ரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (31). இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுவதுடன், லோடு­மேன் வேலையும் செய்து வந்­தார். இவர் இன்று (பிப்.15) காம­ரா­ஜர் சாலை­யில் பொரி கடலை மில் அருகே லோடு இறக்கி கொண்டிருந்­தபோது திடீ­ரென்று மயங்கி விழுந்து உயிரிழந்­தார். இது குறித்து தெப்­பக்­குளம் போலீ­சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்­ற­னர்.

error: Content is protected !!