Madurai

News February 17, 2025

முதல்வர் தவறான தகவலை பேசி வருகிறார்- எல்.முருகன்

image

மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த பட்ஜெட் 2047 ஆண்டுக்கு அடித்தளமிட்டுள்ள பட்ஜெட் எனவும், தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தவறான தகவலை மக்களிடம் பேசி வருகிறார் எனக் கூறினார்

News February 17, 2025

மதுரையில் 2213 காலிப்பணியிடங்கள் 

image

மதுரை மாவட்ட சத்துணவுத் திட்டத்தில் அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர் பணியிடங்கள் 4,256க்கு மொத்தம் 2,213 இடங்கள் காலியாக உள்ளது. சுமார் 50% காலிப்பணியிடம் உள்ளதால் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பால் ஊழியர்கள் திணறி வருகின்றனர். சென்ற 2017 முதல் இந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளதால் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News February 17, 2025

மதுரை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 

image

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடத்திற்கு நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை <>லிங்க் <<>> இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்க அழைக்கப்படுகின்றனர். விண்ணபிக்க கடைசி நாள் 24.02.0205

News February 17, 2025

மதுரையில் ஒட்டப்பட்ட ஒற்றுமை போஸ்டர்

image

மதுரையில் பல இடங்களில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவ ஒற்றுமையே மதுரை மக்களின் ஆசை என்ற வாசகத்துடன் போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளது. இதில், “தொப்புள்கொடி உறவில் விஷம் கலக்க துடிக்கும் விஷமிகளின் புறந்தள்ளிவிட வேண்டும்”  என்ற வாசகம் அமைந்துள்ளது. இது ஒரு சில மதுரை மக்களின் மனநிலையை காட்டுகிறது. 

News February 17, 2025

மதுரை அமைச்சரின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (17.02.2025) மாலை 4 மணிக்கு மதுரை மேலப்பொன்னகரத்தில் 21, 22, 57, 58 வார்டுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள் 8 நபர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்குகிறார். மாலை 4:25 மணிக்கு எஸ்.எஸ்.காலனியில் 60, 61, 75 வார்டு மாற்றுத் திறனாளிகள் 6 நபர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்குகிறார். மாலை 4:50 மணிக்கு TPK சாலையில் ஸ்கூட்டர் வழங்குகிறார்.

News February 17, 2025

கிரிக்கெட் போட்டியில் அசத்திய பெண் கவுன்சிலர்

image

முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் மாமன்ற உறுப்பினர்கள் அணியில் பங்கேற்ற மதுரை 79வது வார்டு மாமன்ற உறுப்பினர் லக்க்ஷிகா ஸ்ரீ சிறப்பாக விளையாடியமைக்காக அவருக்கு எம்.பி. தயாநிதி மாறன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

News February 16, 2025

மதுரையில் நாளை மக்கள் குறைத்தீர் கூட்டம்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே மாவட்ட மக்கள் தங்கள் பகுதியில் நிலவும் அடிப்படை வசதி சார்ந்த, பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட குறைகள் சார்ந்த கோரிக்கைகளை மனுக்களாக அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.*பக்கத்து வீட்டு நண்பர்களுக்கு பகிர்ந்து  தெரியப்படுத்துங்கள்*

News February 16, 2025

மாநகராட்சி மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 

image

சி.எம்.ஆர். சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் வரும் பிப்.18ம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் ஆணையாளர், துணை மேயர், மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். எனவே பொதுமக்கள் பங்கேற்று குறைகளை மனுக்களாக அளித்து நிவர்த்தி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. *ஷேர்

News February 16, 2025

மதுரை மாவட்ட காவல்துறை ரோந்து பணி விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று(பிப்.16) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 16, 2025

மதுரையில் சின்னம்மை தாக்கம் அதிகரிப்பு

image

மதுரையில் சின்னம்மையின் (சிக்கன்பாக்ஸ்) தாக்கம் துவங்கியுள்ளது.பிப். 1 முதல் 15 வரை தோப்பூரில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சின்னம்மை, பொண்ணுக்கு வீங்கி (மம்ஸ்), நரம்பைத் தாக்கும் அம்மைத்தொற்று பாதிப்பிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்றும் 2 குழந்தைகள் சின்னம்மை, மம்ஸ் பாதிப்பிற்கு அனுமதிக்கப்பட்டனர். 6 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு உள்ளது.

error: Content is protected !!