Madurai

News February 23, 2025

சோழவந்தானில் அரசு பஸ் மோதி மாணவி பலி

image

சோழவந்தானை சேர்ந்த தம்பதியர் சண்முககுமார் வாசுகிக்கு 3 பெண் குழந்தைகள். இன்று மாலை பள்ளி முடிந்த பின்னர் 3 குழந்தைகளையும் வாசுகி டூவீலரில் கூட்டி வந்தார். பேட்டை பஸ் நிறுத்தம் அருகே பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் நால்வரும் கீழே விழுந்தனர். இதில் 4ம் வகுப்பு படிக்கும் ஜனஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சோழவந்தான் போலீசார் தப்பி ஓடிய பஸ் டிரைவர் ஜெயசீலனை தேடி வருகின்றனர்.

News February 23, 2025

பசுமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு தமிழக வனத்துறை சார்பில் 100 பேருக்கு பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள் அல்லது கல்வி நிறுவனங்கள் அல்லது குடியிருப்போர் நல சங்கங்கள் அல்லது தனிநபர்கள்அல்லது தொழிற்சாலைகள் ஏப்.15க்குள் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

News February 23, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர் எண் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான மேலூர், உசிலம்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் உள்ளிட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட சரகங்களில் இன்று (22.02.2025) இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 22, 2025

மதுரையின் சிறப்பை பாருங்க!

image

மதுரையைப் போல வேறு எந்த நகருக்கும் இலக்கியச் சிறப்பும் மொழிச் சிறப்பும் கிடையாது.மதுரை மாதிரி எங்கும் தமிழ்ச் சங்கங்கள் இருந்ததில்லை.உலக நீதி நூலான திருக்குறள் மதுரையில் தான் அரங்கேற்றப்பட்டது.தமிழகத்தை அன்றும் இன்றும் உலுக்கிக் கொண்டிருக்கும் இந்தி எதிர்ப்பு போர் 1965ல் மதுரையில் தான் துவங்கியது.மதுரை மாநகரை கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ் என்று கிமு.3ஆம் நூற்றாண்டில் மெகஸ்தனிஸ் குறிப்பிடுகிறார்.Share.

News February 22, 2025

இருமொழிக் கொள்கையில் உறுதி – எம்பி துரை வைகோ 

image

மதுரையில் மதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி துரை வைகோ, தமிழ்நாட்டில் அனைத்து இயக்கங்களும் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளன. மும்மொழிக் கொள்கையால் பள்ளி மாணவர்களுக்கு தான் மன உளைச்சல். பாஜக மதவாத சக்திகள் வேரூன்றக்கூடாது என்பதற்காக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என பேட்டி அளித்தார். 

News February 22, 2025

சாலை பள்ளத்தால் விபத்து-ஒருவர் பலி

image

மதுரை மேல உரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஜெயபாண்டி 53. இவர் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் கூத்தியார் கூண்டிலிருந்து கரடிக்கல் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இருந்த பள்ளம் தெரியாமல் வேகமாக சென்றபோது நிலைத்திடுமாறு கீழே விழுந்துள்ளார்.இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெயபாண்டியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 22, 2025

கலெக்டர் முன் கண்ணீர் வடித்த மதிமுக செயலரால் பரபரப்பு

image

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி நெல் கொள்முதல் மையத்தில், கமிஷனுக்காக மூட்டைகளை எடைபோட விடாமல், அப்பகுதி திமுக ஒன்றிய செயலர் ஒருவர் 5 நாட்களாக அலைக்கழித்ததாக, கூட்டணியில் உள்ள மதிமுக ஒன்றிய செயலரான விவசாயி கலெக்டர் சங்கீதாவிடம் தேம்பி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.எல்லோரின் ஆதரவுடன் தான் கமிஷன் வசூலிக்கின்றனர். யாரிடமும் பேசி ஒரு பயனும் இல்லை என கலெக்டர் சங்கீதாவிடமும் தெரிவித்தார்.

News February 21, 2025

இதை நிரூபித்தால் 1 லட்சம் பரிசு – அர்ஜூன் சம்பத்

image

மதுரையில் அர்ஜூன் சம்பத் பேட்டியளித்தார். தமிழகத்தில் தமிழை பயிற்று மொழியாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் 5ம் வகுப்பு வரை தமிழை மட்டுமே கற்பிக்க வேண்டும். 5ம் வகுப்புக்கு மேலாக மும்மொழி கல்விக் கொள்கை அமல்படுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கை என்பது தாய்மொழி கல்விக் கொள்கையை வலியுறுத்துவதாகும். தேசிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு உள்ளது என நிரூபித்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன் என்றார்.

News February 21, 2025

மதுரை அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு…!

image

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியர்கள் பணிக்கு 6காலியிடங்களில் 50 வயதிற்குட்பட்ட செவிலியர்கள் விண்ணப்பிக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. DGNM & Bsc Nursing பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கவும் மேலும் மாதம் ரூ.18,000 சம்பளம் என அறிவிப்பு. மேலும் இதற்குத் தகுதியானவர்கள் <>இணையதளம் <<>>மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

News February 21, 2025

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி விரைவில் மதுரைக்கு மாற வாய்ப்பு!

image

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ராமநாதபுரத்திலுள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை அதன் நிரந்தர வளாகத்திற்கு மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன.

என மதுரை எய்ம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது

error: Content is protected !!