Madurai

News February 25, 2025

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

image

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்து வரும் விவசாயிகள், நிலமற்ற ஏழை விவசாயிகள் பயனடையும் நோக்கில் மதுரை மாவட்டத்தில், அனைத்து வருவாய் வட்டங்களிலும் 27.02.2025 (வியாழக்கிழமை) அன்று நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் 2011இன் கீழ் பதிவு பெற்ற விவசாய உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News February 25, 2025

திமுக பகல் கனவு காண்கிறது – சசிகலா பேச்சு

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய சசிகலா, “தமிழகத்தில் 2026-ல் ஆட்சிக்கு வருவதற்கு, திமுக பகல் கனவு காண்கிறது. தமிழகத்தில் 2026 தேர்தலில் மகத்தான வெற்றியை நாம் பெறுவோம். இதற்கு அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும். வென்று காட்டுவோம் ” என்று பேசினார்.

News February 25, 2025

மதுரை மாவட்டத்தில் 51 இடங்களில் முதல்வர் மருந்தகம்

image

தமிழகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.24) தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் ஆரப்பாளையம், வில்லாபுரம், செனாய் நகர், முடக்கு சாலை, அலங்காநல்லூர் உள்ளிட்ட 51 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 24, 2025

மஞ்சப்பை விருது 2025க்கு விண்ணப்பிக்கலாம்

image

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளுக்கு விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

News February 24, 2025

குடும்ப அட்டைதாரர்களே சீக்கிரமா இதை பண்ணுங்க.!

image

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி AAY மற்றும் PHH அட்டைதாரர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் கைரேகை பதிவினை உடனடியாக நியாய விலைக் கடைகளுக்கு சென்று கைரேகைப் பதிவினை உடனடியாக 28.02.2025க்குள் முடிக்குமாறு மதுரை மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. Share It.

News February 24, 2025

மதுரை-சிங்கப்பூர் விமான சேவை நிறுத்தி வைப்பு – கடிதம்

image

வருகிற ஏப்ரல் மாதம் முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மதுரை டூ சிங்கப்பூர் பயணிகள் நேரடி விமான சேவையை மத்திய அரசு நிறுத்தி வைக்க போவதாக வந்த தகவலை அடுத்து விமான போக்குவரத்தை நிறுத்தக்கூடாது என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி மாணிக்கம் தாகூர் மத்திய சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஸ்ரீராம் மோகன் நாயுடு அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

News February 24, 2025

பாரதிய கிஸான் தேசிய து.தலைவராக மதுரைக்காரர் தேர்வு

image

மதுரை: இந்தியா முழுவதும் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் பாரதிய கிஸான் சங்கத்தின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், பாரதிய கிஸான் சங்கத்தின் தேசிய துணைத் தலைவராக மதுரையைச் சேர்ந்த பெருமாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேசிய தலைவராக தெலுங்கானாவைச் சேர்ந்த சாய் ரெட்டி, தேசிய பொதுச் செயலாளராக ஒடிசாவைச் சேர்ந்த மோஹன் மிஸ்ரா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். மதுரையில் மட்டும் 45 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 24, 2025

மாநகராட்சியில் ‘மரண’ ரோடுகள்; தாறுமாறு ரோடு!!!

image

மதுரை மாநகராட்சி ரோடுகளில் வாகனம் ஓட்டுவதும், மலைக் குன்றுகளில் சாகச பயணம் மேற்கொள்வதும் ஒன்றுதான் என நினைக்கும் அளவுக்கு ரோடுகள் பெயர்ந்து, மேடுபள்ளங்களாக தாறுமாறாக கிடக்கின்றன. புதிய ரோடு அமைக்கவும், சேதமான ரோடுகளை சீரமைக்கவும் நிதி ஒதுக்கி ஒரு மாதமாகியும், குடிநீர் திட்டப் பணிகள் முடியாததால் பணிகளை மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது.இது குறித்து உங்கள் கருத்தை கீழே பதிவிடலாம்.

News February 23, 2025

மதுரை மாவட்டத்தில் பகல் ரோந்து காவலர் எண் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர், பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை ரோந்து பணியை மேற்கொள்ள உள்ள காவல்துறை விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக தொலைபேசி எண் வெளியிட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!