India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை அவனியாபுரம் அடுத்த வைக்கம் பெரியார் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்குள்ள புதருக்குள் பதுங்கி இருந்த பாலமுருகன், குமார், அருண்குமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து 4 பட்டாக்கத்தி, 1 அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இரவு நேரங்களில் வீடுகளில் கொள்ளை அடிக்க திட்டமிட்டது தெரியவந்தது.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் குப்பைகளை பொதுவெளியில் வீசாமல், ரயிலில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியை பயன்படுத்துமாறு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குப்பைகளை
வெளியே வீசுவதால் கழிவு நீர் வாய்க்கால்கள் அடைபட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவது, சிக்னல் மற்றும் தொலை தொடர்பு உபகரணங்களில் சிக்கி அவற்றை பழுதடைய செய்வது உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் 105, 106 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இயல்பான நாட்களில் 2 ஆயிரம் லிட்டர் தயிர் விற்பனையாக கூடிய நிலையில் கடந்த 5 நாட்களாக நாளொன்றுக்கு 2700 லிட்டர் வரை தயிர் விற்பனையாகிறது எனவும், மோர் இயல்பான நாட்களில் நாள்தோறும் 200 லிட்டர் விற்பனையான நிலையில் தற்போது நாள்தோறும் 800 லிட்டர் அதிகரித்து வருவதாக ஆவின் பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக 20.09.2024 அன்று இரவு 20.00 மணி முதல் 23.09.2024 (திங்கள்கிழமை) காலை 06.00 வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனவே பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் அனைத்து விதமான சேவைகளுக்கும் தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்த பின்பு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கன்னிவாடி அருகில் வாகன விபத்தில் தலைக்காயப் பிரிவில் சிகிச்சையில் இருந்த கோயமுத்தூர் ரத்தினபுரியை சேர்ந்த சாந்தி (47) என்பவர் மூளைச் சாவு அடைந்தார். அவருடைய உடலுறுப்புகளை உறவினர்கள் தானம் செய்ய முன் வந்ததையடுத்து அவரது இதயம் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் காவல்துறை உதவியோடு போக்குவரத்து இடையூறு இல்லாமல் தாமதமின்றி கொண்டு செல்லப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் 41 டிகிரி செல்சியசும், மதுரை நகரில் 40.8 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவானது. வழக்கமாக செப்டம்பர் மாதங்களில் குறைந்தபட்சம் 24.8 முதல் அதிகபட்சம் 35.7 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெப்பநிலை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு செப்டம்பரில் அதிகளவு வெப்பம் பதிவாகி வருவதற்கு, தொடர்ந்து ஒரு மாதமாக வறண்ட வானிலை நிலவுவதே காரணம் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அனைத்து தாலுகாக்களிலும் குறைந்தபட்சம் மாவட்ட தலைநகரங்களில் அரசு மேல்நிலை பள்ளிகள் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அரசு மேல்நிலை பள்ளிகள் அமைக்காவிட்டாலும், மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள் என இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வலியுறுத்தினர்.
மதுரை சமயநல்லூரை சேர்ந்தவர் பிரேம்குமார் 30. இவர் கோவையில் திரையரங்கில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மதுரை சேர்ந்த ஒரு பெண்ணையும் கோவையை சேர்ந்த ஒரு பெண்ணையும் ஒரே நேரத்தில் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதையறிந்த இரு பெண்களும் பிரேம்குமார் தங்கியுள்ள அறைக்கு வருவதாக போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு பிரேம்குமார் செய்ய தெரியாமல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பின்படி கள்ளந்திரி – பூவைக்குடி கிராமத்தில் அழகர் கோவிலுக்கு கோயிலுக்கு சொந்தமான காலியிடத்தில் கள்ளழகர் திருமண மண்டபம் ரூ.9.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் தளம் 11,513 சதுர அடியில் 270 பேர் உணவு அருந்தும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. பொருட்கள் வைப்பறை, கை கழுவும் பகுதி, மின் தூக்கி (லிப்ட்) ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.
பருவக்காற்றின் திசை மாற்றம் காரணமாக தமிழகத்தில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மதுரையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நேற்று பதிவானது. கடந்த 2015-ஆம் ஆண்டு 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், 2019-ஆம் ஆண்டு 104.72 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவானதே மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் மாதங்களில் பதிவான அதிகபட்ச வெப்ப நிலையாகும்.
Sorry, no posts matched your criteria.